சனி, 26 மார்ச், 2016


றொப் போர்ட் - ரொறோண்டோவின் மக்கள் திலகம்

பலருக்கு இது விசனமாகவே இருக்கும். ஆனால் நான் மதிக்கும்  மனிதருள் ரொறொண்டோவின் முன்னாள் நகர பிதா றொப் போட்டும் ஒருவர். இந்த வாரம் அவரது உடல் ரொரொண்டோ மாநகரசபைக்  கட்டிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நான் அவர்மீது வைத்திருக்கும் மதிப்பிக்குக் காரணம் தன் மனதில் பட்டத்தை ஒளிவு மறைவின்றிக் கூறுவது - அது அப்பட்டமான பொய் என்று தெரிந்தும்கூட. அது ஒரு குழந்தைக்கான குணம். ஒரு குழந்தையின் குழப்படிகளைக்  கொண்ட ஒரு முழு மனிதர். அதனால் தான்  ரொறோண்டோ பெரும்பாக மக்கள் மட்டுமல்ல உலகத்தின் கோடிகளில் இருக்கும் மக்களுக்கும் அவரது இழப்பு கவலையைத் தருகிறது.

அவர் ஒரு திமிர் பிடித்தவர் இ குடிகாரர்இ போதை வஸ்து பாவிப்பவர்இ கேடிகளோடு சகவாசம் வைத்திருப்பவர் என்பனவெல்லாம் ஊடகங்களால் ஊதப்பட்டன. பலரும் அதை நம்பினார்கள். அதில் சிலவற்றில் உண்மை இருப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் மக்கள் அவருக்காகக் கண்ணீர் விடுகிறார்கள் என்றால்?

இன்றய உலகில் எந்தவொரு குடும்பத்திலுமோ அல்லது அவர்களது உறவினர்களின் குடும்பங்களிலுமோ இப்படியொரு 'குழ்ந்தை' இல்லாமல் இருக்க  வாய்ப்பில்லை. அக் குழந்தையால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது தான் அக் குழந்தையின் குற்றம் கவனத்தில் எடுக்கப்படுகிறது.
ரொறொண்டோவின் 'குழந்தையால்' நகருக்கு ஏற்பட்ட நன்மைகள் அதிகமென்று நம்புபவர்களே அதிகம்.

றொப்  போட்டின் வீழ்ச்சிக்கு அவரது எதிரிகள் காரணமல்ல. அவரைச் சூழ்ந்திருந்தஇ அவரால் பயன் பெற்றஇ அவரை உசுப்பேத்திப் பின்னர் கைவிட்டு முதுகில் குத்திய நண்பர்கள் தான் காரணம். நண்பர்களுக்காக எதையும் செய்தத் துணிந்த வகையினரில் ஒருவர் தான் போட். அவரைப் போட்டுக் கொடுத்த ப்ரூட்டஸ்கள் அவரது சகபாடிகள் தான்.

றொப்  போட்டின் குற்றம் குறைகள் திடீரென்று அறியப்பட்டவையல்ல. அவற்றை ஊட கங்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் பலரும் அவரை விட அதிகம் கறை படிந்தவர்கள். நாற்சந்தியில் அவரது மானம் தூக்கிலிடப்பட்ட போதும் மக்கள் அதைக் கண்டு கொள்ளவுமில்லைஇ கை கொட்டிச் சிரிக்கவுமில்லை. மாறாக அவரைத் தம் குழந்தைகளில் ஒருவராகவே தத்தெடுத்துக்  கொண்டனர்.

அவரது முகத்தில் ஒரு குழந்தையின் களையே எப்போதும் தெரியும். எழுதுகோல்களைத் துப்பாக்கியாகப் பாவிக்கும் உடகங்ககளை அவர் மதித்ததில்லை. ஆனால் அவர்களை எதிர் கொள்ளாது அவர் போவதுமில்லை. ஊடகங்களை நையாண்டி செய்யும் அளவுக்குத் தைரியமுள்ள ஒரு அரசியல்வாதி அவர்.

அவர் மீது காட்டப்பட்ட அழுக்குகள் அவரில் குறைகாணும் எல்லோரிடமும் இருந்திருக்க வேண்டும்.  அவர்களது அரசியல் கவசங்கள் (pழடவைiஉயட உழசசநஉவநௌள) அவற்றை மறைத்து விடுவதுண்டு. கவசம் போடாமல் இருந்ததுதான் றொப் போட்டின் பிரச்சினை. தன் வார்த்தைகள் எவரையும் புண்படுத்துமா என்பதை யோசியாது மனதில் பட்டதை அப்படியே சொல்லும் பழக்கம் அவருடையது. பெண்களையும்  மாற்று நிறத்தவர்களையும் தூற்றுபவர். ஆனால் அவரது இழப்பின் பின்னர் மரியாதை செலுத்துவதற்கு முண்டியடித்துக் கொள்பவர்களில் இந்த இரண்டு சாராருமே முன்னணியில் நிற்கிறார்கள்.

காரணம் யதார்த்தம். நாம் யாரும் செய்யாத விடயங்களை அவர் செய்யவில்லை. நாம் யாரும் சொல்லாத விடயங்களை அவர் சொல்லவில்லை. ஒய்வு நேரங்களில் பணம் ஏதும் அறவிடாமல் வறிய குழந்தைகளுக்கு விளையாட்டுக் கற்றுக் கொடுத்தார். குடியானவர்களில் எந்த ஒருவர் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தார். இதுவெல்லாம் சபைக்கு வந்தது இப்போதுதான்.

இது சமூக உறவாடல் தளங்களின் காலம். செய்திகளைத் திரிபு படுத்தித் தம் சுய திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள்  ஒதுக்கப்பட்டு உண்மையான 'மக்கள் தீர்ப்புகள்' வெளிப்படும் காலம்.  றொப்  போட் ஒரு சாதாரண மனிதர் என்பதை அவர்கள் கண்டுகொண்டு விட்டார்கள். தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் அத தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள றொப் போட்  உயிரோடு இல்லை.

போதைச் சிகிச்சை பெற்று மீண்டபோது றொப் போட் தனது 'திருந்திய' இரண்டாவது வாழ்வுக்கான ஏக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டதாகச் சொன்னார்கள். தன் மனைவி குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவிட வேண்டுமென அவர் கூறியதாகக் கேள்வி.

றொப்  போட்டின் பதவிக் காலத்தில் அவரது சகோதரர் டக் போர்ட்  தனது தம்பியை நிழல் போல் தொடர்வார். இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் இருந்த பாசம் அதிசயமாகவிருந்தது. மரணத்துக்குப் பின் தாயாரின் கூற்றிலிருந்தும் ஒரு உண்மை புலப்பட்டது. வீட்டிலுள்ள குழப்படியான கடைக்குட்டியின் மீது எவ்வளவு பாசத்தைப் பொழிவோமோ அதுவே தான் போட் குடும்பத்திலும். அவர்கள் நம்முடையதைப் போல ஒரு சாதாரண குடும்பம்தான். அவர் நகரபிதாவாகியது தான்  அசாதாரணம். சாதாராண மக்கள் விட்டு விடுதலையாகி விட்டதற்கான அறிகுறியே அவர் நகரபிதாவாகியது. அதுவே அவர் அடுத்த சந்ததிக்கு விட்டுப் போகும் குறிகாட்டி.


றொப்  போட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது பல. அவர் தன மனத்தைப் பேசியவர். நடிக்கவில்லை. அவர் பணக்காரராயினும் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். குறைகளுடையாதாயினும் 'அது என் குழந்தை' என முத்தம் பொழியும் ஒரு தாயின் உணர்வுடனே மக்கள் அவரை நேசித்தனர். அதைத் தெரிந்துகொண்டு மனநிறைவுடன் மரணத்தை எதிர்கொண்டதே அவரது பலம்.

So long Rob!

ஆயுதம் ஏந்தாத வீரர்களும் நிபந்தனையற்ற நேசமும் (Unarmed Troops and Unconditional Love)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இன்று (தை 12, 2015) அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது எட்டாவதும் இறுதியானதுமான State of the Union பேச்சை நிகழ்த்தினார் . பெரும்பாலான நேரங்களில் இத் ஒரு வெறும் சடங்காகவே எனக்குத் தெரிவதுண்டு. இன்றய நாள் இச் சடங்கை விரும்பிப் பார்த்தேன்.

ஒரு அடிமையின் வழித்தோன்றல் அமெரிக்கப் பிரதிநிதியாய் வந்தது அந்த அடிமை குலத்துக்குப் பெருமை சேர்த்திருப்பினும் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து முழுமையாக எட்டாண்டு காலம் ஆள வைத்த அந்த மற்றய குலத்துக்கே அதிகப் பெருமை சேரவேண்டும். கென்னெடி, மாட்டின் லூதர் கிங் வரிசையில் இன்னுமொரு துப்பாக்கிக் குண்டுக்கு வேலை வந்துவிடக் கூடாதென்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். வந்தபோது முழங்கியது போலவே போகும்போதும் முழங்கிப் போகிறார்.

மாற்றம் வேண்டுமென்று இன்றய அரசியல்வாதிகள் போடும் கூச்சலை ஆரம்பித்து வைத்தவர் ஒபாமா.  நேர்மையானவர்கள்  அரசியலில் நிலைப்பது கடினம். ஜிம்மி கார்ட்டர், போப் ரே போன்ற சிலரது அகால ஆட்சி முடிவுகள் நல்ல உதாரணம்.

கூச்சல் கலாச்சாரம் ஜனநாயகத்தின் ஒரு கூறாக மாறிவிட்ட காலத்தில் நாம் வாழ்வதால் அவரது கூச்சலை செவிக்குறை கொண்டவர்களுக்கென ஒதுக்கிவிட்டுப் பார்க்கலாமெனச் சமாதானம் கொண்டு மீதியைப் பார்க்கலாம்.

ஒபாமாவின் பேச்சு ஏனைய முன்னாள் பீற்றல் பிரங்கிகளினது பேச்சுக்களை விட வித்தியாசமாகவிருந்தது. ஒபாமா சாதித்தவற்றைப் பற்றி அதிகம் பீற்றிக் கொள்ளவில்லை. அவர் பலவற்றைச் சாதித்திருக்கிறார். 18 மில்லியன் மக்கள் நலக்காப்புறுதி பெற்றிருக்கிறார்கள்.  போர் சிதைத்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி என்ற வரலாற்றுச் சிறப்பையும் தட்டிக் கொண்டார்.

இன்றய பேச்சில் அவர் முக்கியத்துவம் கொடுத்தது தன்னால் செய்ய முடியாமற் போனவற்றிற்காக. இரண்டு கட்சிகளிடையேயும் ஒரு பரஸ்பர புரிந்துணர்வைக் கொண்டுவந்து நாட்டுக்குத் தேவையான நல்ல பல விடயங்களைச் செய்ய முடியாமற் போனதையிட்டு அவர் கவலைப்பட்டார். ஆயுதங்களுக்குப் பலி போகும் குழந்தைகள் பற்றிக் கவலைப்பட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலம் மட்டுமல்ல உலகின் எதிர்காலமும் அவரது கரிசனைக்குள் அகப்பட்டிருந்தது. பொருளாதாரம், சுற்றுச் சூழல் என்று இன்னோரன்ன விடயங்களில் அமெரிக்க சிந்தனைக்கு ஒவ்வாதிருந்தது அவரது அக்கறை.

எதிர்காலம் பற்றி நம்பிக்கையோடு  இருந்தாலும் உலகுக்குத் தலைமை தாங்கும் நாடென்ற விடயத்தில் அமெரிக்கா இன்னும் மாற வேண்டுமென்பதில் அவரது விருப்பு ஒன்று - அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் வேண்டுமென்பது.

இவ்வளவு நல்லவரையும் நான் பல தடவைகள் விமர்சித்ததுண்டு. இப்போதும் தான். அமெரிக்க ஆயுத மோகத்தையும் குழந்தைகள் பலியெடுக்கப்படுவதையும் சகிக்காது கண்ணீர் விடும் ஒரு மனிதர் குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுக்கும் ஆளில்லா விமானங்களை ஏவி விடும் கட்டளைகளை வாரா வாரம் பிறப்பிக்கும் கொலைகாரனாகவும் இருக்கிறார்.

தன்  பேச்சை முடிக்கும்போது ஒபாமா மாட்டின் லூதர் கிங் அவர்களுடைய மேற்கோள் ஒன்றைக் கூறினார். அது தான் 'Unarmed troops and Unconditional love' என்பது. அமெரிக்கா ஒரு ஆயுதமேந்தாத வீரர்களைக் கொண்டதும்  நிபந்தனையற்ற நேசத்தை வெளிப்படுத்துவதுமான நாடாக இருக்க வேண்டுமென டாக்டர் கிங் விரும்பியதாக அதைச் சாரம் கொள்ளலாம்.

டாக்டர் கிங் கின் விருப்பத்தை ஒபாமா ஒரு வகையில் நிறைவேற்றியிருக்கிறார். அமெரிக்க வீரர்களிடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிட்டு அவர்கள் கைகளில் ஆளில்லா விமானங்களின் இயக்கிகளைக் கொடுத்தமை. அமெரிக்கா மீது அதன் மக்களை நிபந்தனையற்ற நேசத்தைப் பொழிய வைத்தமை.

அமெரிக்காவில் எவர் ஜனாதிபதியானாலென்ன நிழல் ஜனாதிபதிகளே ஆட்சியை நடாத்துகிறவர்கள் என்றொரு கதை கர்ணபரம்பரையாக வருகிறது. கட்டளைகளை அவர் பிறப்பிக்காமலும் இருக்கலாம். மேனியைக் கொல்வதும் வீரத்தில் ஒன்று தானே!

சில வேளைகளில் வெள்ளையை அதிகம் பார்த்தால் தான் கறுப்பின் அருமை தெரியும். சமீப காலங்களில் ட்ரம்ப் என்றொரு பிறவி தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் அலங்கரிக்கிறது. இதைச் சுற்றி நின்று காவடி எடுக்கும் பிறவிகளின் கூச்சல்களோ காதைப் பிளக்கிறது. அடுத்த ஜனாதிபதியாக அது வந்துவிடுமென்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது.

இந்த இடத்தில் ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒரே ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன். தயவு செய்து அமெரிக்காவில் இன்னும் மாற்றம் வேண்டுமென்று கேட்காதீர்கள். உங்கள் விருப்பம் ட்ரம்ப் போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தி விடலாம்.

மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கே மாற்றம் பயன் தரும். அது நம்ம நாட்டிலும் தான்.



















வியாழன், 25 பிப்ரவரி, 2016

ஸ்டாலினின் முடிவு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

சமீபத்தில் றோஸ்மேறி சுலிவன் எழுதிய ஸ்ராலினின் மகள் (Stalin’s Daughter) என்னும் புத்தகத்தை வாசித்தேன். ஸ்டாலினை ஒரு கொடுங்கோலர், சர்வாதிகாரி எந்நும் படிமங்களுடு பார்த்திருந்த எனக்கு இன்னூல் ஒருவித சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. 

சோவியத் குடியரசு பற்றி மறைக்கப்பட்ட பக்கங்கள் பல.  ஸ்டாலினின் ரஷ்யா பற்றி நிறைய விடயங்களை ஸ்வெற்லானாவின் பிரதிபலிப்புக்களாக இப் புத்தகம் தருகிறது. 

1926 இல் ரஷ்யாவில் பிறந்து கிரெம்லின் அரச மாளிகையில் வளர்ந்த ஸ்டாலினின் மகள் சுவெட்லானா தனது 85 வது வயதில் அமெரிக்காவில் தனிமையில் வறுமையில் மடிந்து போனார். 

ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவே வரலாறு சொல்கிறது. சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள் என்றுதான் எமக்குக் கற்பிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போதும் அப்படியொரு உண்ர்வுதான் மேல் நிற்கிறது. அதற்கும் மேலால் இந் நூலில் இன்னுமொரு நிழலுணர்வு ஸ்டாலினையும் அவர் சார்ந்த கம்யூனிச சித்தாந்தத்தையும் பின்புலத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. பிரச்சார சித்தரிப்புகள் என்று எதுவுமில்லை. 

வேண்டுமானால் ஸ்வெட்லானாவின் மீதான ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அவரது தவறுகளுக்கான 
காரணங்களையும் ரஷ்யா மீது சுமத்தும் முயற்சி தென்படலாம்.

தாம் வரித்துக் கொண்ட கொள்கைகளை நடைமுறைப் படுத்த ஸ்ராலின் கையாண்ட வழிமுறைகள் நாகரிக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை. 16, 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருந்த தொழிற் புரட்சி, நிலங்களை வளங்களாகக் கொண்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வறுமைக் கோடு, தன்நிறைவு பற்றிய பொருளாதார அளவுகோல்கள் பற்றி அறிந்திராத காலமது. நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார அணி சேர்தல் முடுக்கப்பட்ட நிலை. நகரமயமாக்கலும் இயந்திரமயமாக்கலும் மட்டுமே ஒரு நாட்டை முன்னிலையில் வைத்திருக்கும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்தது. 

அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து லெனினின் நோக்கம் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான பலமான சோவியத் குடியரசை அமைப்பது. அதற்கமைய கட்சியால் நிறுவப்பட்ட விஞ்ஞாபனம் மிகவும் இறுக்கமானது. அதை நடைமுறைப்படுத்த எவர் முன்வந்திருப்பினும் அவர் சர்வாதிகாரியாகவே 
இருந்திருக்க வேண்டும். ஸ்டாலின் அதைக் கட்சியின் விருப்பிற்கமையச் செய்தார். அதற்காக அவர் விரும்பி இழந்தது பல, ஒருவர் ஸ்வெட்லானா.

ஸ்டாலினுக்கு ஸ்வெட்லானாவைத் தவிர இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர். ஆனாலும் ஸ்வெட்லானா மீது அவர் மிகவும் பிரியமும் கரிசனையும் கொண்டிருந்தார். ஜார் அரசரின் காலத்தில் போலவே மேற்தட்டு வர்க்கம் கல்வி பயிலும் பாடசாலையில் தான் ஸ்வெட்லானா கல்வி கற்றார். இலக்கியம், வரலாறு, ரஷ்ய கலாச்சாரம், மேடை இலக்கியம் கட்சி சித்தாந்தம் யாவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவ்ர் ஸ்வெட்லானா. அதனால் அவருக்கு நிறைய யூத-ரஷ்ய நண்பர்கள் கிடைத்தனர். அவர்களில் இருவரைத் திருமணமும் செய்துகொண்டார்.  பிள்ளைகளும் உண்டு. ஆனால் ஸ்டாலின் யூதரை வெறுப்பவர். அதனால் பேரப்பிள்ளைக்ளையும் வெறுத்தார். 

நகர மயமாக்கலின் போது விவசாயிகளின் நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன . பஞ்சம் தலைவிரித்தாடியது. பல மில்லியன்  மக்கள் பட்டினியால் மரணமடைந்தனர். எதிர்த்தவர்கள் 
கொல்லப்பட்டோ குளிர் வலயங்கள் அல்லது தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டோ துன்பங்களை அனுபவித்தனர். கட்சியின் பேரிலும் நாட்டின் பேரிலும் இவைகள் நியாயமாக்கப்பட்டன. ஸ்டாலின் அப்போதும் சிறந்த தலைவராகவே சோவியத் மக்களால் கருதப்பட்டார். கட்சியின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் துரோகிகளாக்கப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். சிலருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதில் ஸ்டாலினின் மனைவியின் பெற்றோர், மனைவியின் தங்கை மற்றும் உறவினர் பலர். 

ஸ்டாலின் தனது இரண்டு ஆண் மக்களையும் போர் முனைக்கு அனுப்பினார். அவர்களில் ஒருவர் ஜேர்மானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட போது அவரை மீட்பதற்கு ஸ்டாலின் முயற்சி எடுக்க மறுத்துவிட்டார். கைதிகள் பரிமாற்றத்திற்கு மகனைப் பிணையாகத் தர ஜேர்மானியர் 
முன்வந்தபோது  “ எல்லா சோவியத் கைதிகளும் எனது பிள்ளைகள் தான்” என்று கூறித்  தன மகனை விடுவிக்க மறுத்துவிட்டார். 

கட்சியின் சித்தாந்தம் புனிதமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அதை நடைமுறைப் படுத்த கொடுத்த விலை பன்மடங்கு. கட்சிக்கும் சரி கட்சியின் காவலர்களுக்கும் சரி கண்கள் 
இருண்டிருந்திருக்கலாம். மருண்டவர்கள் எல்லாம் எதிர்ப்புரட்சிக்காரர்களாகப் பட்டனர். 

எதிர்ப்புரட்சிக்காரரை இனம்காணும் பொறுப்பு மத்திய குழு உறுப்பினர் லவெண்றி பெரியா விடம் இருந்தது. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் பலர் அவர் பட்டியலில் இருந்தனர். ஸ்டாலினை மாசுபடுத்தி நாட்டைச் சிதைக்க எதிரிகள் முனையலாம் அதற்கு உகந்தவர்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களே என்றொரு கருத்தும் அதே வேளை ஸ்டாலினைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற பெரியா முயன்றிருக்கலாம் என்றொரு கருத்தும் இருந்ததாகத் தெரிகிறது. 

எதுவானாலும் ஸ்டாலின் தான் இறுதிவரை நீதிமானாக நடந்து கொள்ள வேண்டுமென்பதனால் தான் தன் உறவினர்கள், நண்பர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்ட போதும் கருணை காட்ட் 
மறுத்துவிட்டார் என்ற கருத்து மேலோங்கி நின்றது எனவும் கருதப்பட்டது.

ஸ்டாலினின் முடிவு சடுதியானது. முதல் நாளிரவு மத்திய குழுவின் முக்கியஸ்தர்கள், குருஸ்சேவ் பெரியா ஈறாக, ஸ்டாலினின் வீட்டில் இரவுணவு உண்டபின்னர் மறுநாள் சுகவீனமுறுகிறார். கட்சியின் நடவடிக்கை காரணமாக ரஷ்யாவின் மிகச் சிறந்த மருத்துவர்கள் எதிர்ப்புரட்சிக்காரர்களெனச் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர் (‘Doctor Plot’). 

சிறந்த மருத்துவர் ஒருவருக்கு விடுதலையளிக்கப்பட்டு சிகிச்சைக்காகாக் கொண்டுவரப்பட்டார். உரிய காலத்தில் முறையான சிகிச்சையளிக்கப்படாமல் ஸ்டாலின் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. 

சில நாட்களில் பெரியா கைதுசெய்யபட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. குருஸ்சேவ் ஆட்சியில் அமர்கிறார். 

அவரது முதல் கடமை ஸ்டாலினைத் துரோகியாக்குவது. அவரால் சிறைவைக்கப்பட்டவ்ர்கள் ‘குற்றங்கள் நிரூபிக்கப்பட முடியாமையால்’ விடுதலை பெற்றனர். 

மார்ச் மாதம் 5ம் திகதி, 1953 ம் ஆண்டு ஸ்டாலின் மரணமடைந்தார். மக்கள் அவரை வெறுத்தற்கான அடையாளம் ஏதுமின்றி ஸ்டாலினின் மரணச் சடங்கு சிறப்பாக நடந்தது.

ஸ்டாலின் நாட்டுடமையெனக் கூறி அவரது சொத்துக்கள் அரசினால் எடுக்கப்பட்டன. சுவெட்லானா தெருவில் விடப்பட்டார். 

ஸ்டாலின் ஒரு புரட்சிக்காரர். சர்வாதிகாரியாக வரவேண்டுமென்று அவர் நினைத்திருந்ததற்கான தடயங்கள் தெரியவில்லை ஆனால் அவரைக் கொடுங்கோலனாக மாற்றியதற்குரிய தடயங்கள் நிறையத் தெரிகின்றன. 

அதிலொன்று, சந்தேகம்.

இக் கட்டுரை ரொறோண்டோவிலிருந்து வெளிவரும் 'ஈ குருவி' பத்திரிகையின்  மாசி 2016 இதழுக்காக எழுதப்பட்டு பிரசுரமானது.


புதன், 24 பிப்ரவரி, 2016

மூலஸ்தானம்


(இக் கட்டுரை ரொறோண்டோவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' 25 ம் வருட சிறப்பு மலரில் மாசி 2016 இல் வெளியானது)

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் கனடாவில் மரணமானார். சிலகாலமாகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்த அவரது மரணம் எனக்குள் சில கேள்விகளை எழுப்பின.

இவரது மரணத்தின் சில வாரங்களின் பின் ஒரு நாள் கனடிய சீ.பி.சீ. வானொலியில் ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்துப் பார்த்தபோது என் கேள்விகளுக்கு விடை கிடைத்திருப்பதாக நான் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மரணம் கொடியது எனச் சிலர் நினைப்பதுண்டு. மனித உறவுகளைப் பொறுத்த வரையில் இழப்பு கொடியதாக இருக்கலாம். நண்பர்  மரணப்படுக்கையில் இருந்த நிலையில் மரணம் சில வேளைகளில் அவசியமானது என எண்ணவேண்டியிருந்தது.

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் நான் அந்த நண்பரை அவரது வீட்டில் சந்தித்திருந்தேன். 'முது வேனில் பொழுதொன்றில் அவர் தன் வீட்டு முற்றத்து மர நிழலில்’ அமர்ந்திருந்தார். நாட்கள் குறுகிவிட்டதென உணர்ந்திருந்தும் முகத்தில் நம்பிக்கை வேடத்தைத் தரிக்க முற்பட்டுத் தோற்றுவிட்ட களையுடன் உரையாடினார்.

நான் ஒரு மருத்துவரில்லை. ஆனாலும் மருத்துவ மனை உரையாடல்களிலிருந்து ஒன்று புரிந்தது. புற்று நோய் அவரின் உயிரைக் குடிக்கவில்லை. மூளையில் இரத்தக் குழாய் வெடித்திருக்கலாம் அதனால் ஸ்ட்றோக் வந்திருக்கலாம் என்றும் சொன்னார்கள். மருத்துவ மனையில் என்ன  நடைபெற்றிருக்கலாம் என்பதை ஊகிக்க எவருக்கும் நேரமுமில்லை அவசியமுமில்லை.

மரணம் வாசலில் நின்று எட்டிப்பார்க்கும் போது ஒருவருக்கு இருக்கும் மனநிலையைப் புரிந்துகொள்வது இயலாத விடயம். அதுவும்  எதிர்காலம் பற்றிய நிறைய வரைபடங்களோடு நிற்கும் ஒரு படைப்பாளியின் மனநிலை மிகவும் பரிதாபமானது.

திகதி குறிக்கப்பட்ட மரணத்தை எதிர்நோக்கி வாழ்வை நகர்த்தும் மனிதர்களது மனநிலை பற்றிய சீ.பீ.சீ. உரையாடலை இங்கு இணைப்பது பொருத்தமானது.

புற்று நோயின் பிடியில் இருக்கும் ஒரு மாது தன் இயலாமை பற்றி விளக்குகிறார். தன்னைக் கொன்று கொண்டிருக்கும் கொடிய வியாதி புற்று நோயல்ல என்றும் தன்மீது விலங்குகளைப் போட்டிருக்கும் பதட்டமும் மன அழுத்தமுமே தன்னைக் கொல்கின்றன என அவர் விளக்கினார்.

மரணம் குறித்து திகதி நிர்ணயிக்கப்பட்ட எல்லோருக்குமே  நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

நோய் தீர்ப்பில் மனத்தினுடைய பங்கு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று விட்டன. இசை, யோகாசனம், கடவுள் நம்பிக்கை, மாந்திரீகம் என்று ஒவ்வொன்றும் நோய் தீர்ப்பில் தத்தம் வீராப்புகளைப் பறை சாற்றிக்கொண்டும் இருக்கின்றன. நோய் தீர்ப்பதில் பலமான நிர்ப்பீடன ஆற்றலின் பங்கும் அதைப்
பலப்படுத்துவதில் தன்னம்பிக்கையின் அவசியம் பற்றியும் மருத்துவ/ விஞ்ஞான உலகம் தொடர்ந்து பீற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் மரணத்தை முன்னால் நிறுத்தி வைத்துக்கொண்டு அதை எதிர் கொள்பவனிடம் நம்பிக்கை பற்றிப் பேசிப்பாருங்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கனடிய - இத்தாலிய வம்சாவளிப் பெண்ணொருவரைத் தொழில் நிமித்தம் சந்திக்கவேண்டி வந்தது. அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். அருகில் சுமார் ஆறு / ஏழு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை நின்றுகொண்டிருந்தது. அவரது குசினியில் இருந்த குளிரூட்டியில் சாயி பாபாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அது பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன விடயம் ஆச்சரியமாகவிருந்தது.

"நான் முதல் தடவை கர்ப்பிணியாகவிருந்தபோது எனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் என் முன்  இரண்டு விருப்புக்களை முன்வைத்தனர். 'நீ உயிர் வாழ விரும்புகிறாயா  அல்லது குழந்தை உயிர் வாழ வேண்டுமெனெ விரும்புகிறாயா?'"

குழ்ந்தை கருவழிப்புக்கான கால எல்லையைத் தாண்டிவிட்டிருந்தது. அதையும் விட நான்  ஒரு தீவிர கத்தோலிக்க சமயத்தவள். கருவழிப்பு என்பது மறுக்கப்பட்ட விடயம்.

அப்போது நான் யோர்க் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனது மனம் பதட்டப்பட்டுக் கொண்டது  நித்திரையில்லை. மனவழுத்தம் உள்ளே பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது என் சக மாணவி ஒருத்தியுடன் இது பற்றிப் பேசினேன். அவள் ஒரு 'இந்திய' வம்சாவளியினள். 'எங்கள் சமூகத்தில் சாயி பாபா  என்றொருவர் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அவரை வழிபடுபவர்களின் நோய்களைத் தீர்த்து வைப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். விரும்பினால் முயற்சித்துப் பார்.' என்று அவள் சொன்னாள்.

அப்போது  பஜனைக்குப் போக ஆரம்பித்தவள் இன்னும் போகிறேன். இவள் தான் அந்தக் 'கரு' "என்று அருகில் நின்ற பெண் குழந்தையை அணைத்துக் கொஞ்சிக் கொண்டாள்.

கடவுளா? நம்பிக்கையா? எதனாலும் விளக்கம் தரமுடியாது. பதட்டமும்  (anxiety) மன அழுத்தமும்  (depression) இங்கே சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனவா? அல்லது ஆராதனையும் கடவுள் நம்பிக்கையும் இவற்றுக்குச் சிகிச்சையளித்தனவா?

விஞ்ஞானம் தரவுகளோடு வந்திறங்கும்வரை யாராலும் சொல்ல முடியாது.

நண்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சீ.பீ.சீ. உரையாடலில் வந்த பெண் தன்னைக் கடவுள் மறுப்பாளரெனவே கூறினார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டது ஒரு பரீட்ச்சார்த்தமான  சிகிச்சை. அவரை வருத்திய பதட்டத்திற்கான சிகிச்சை.

மரணத்தை எதிர்நோக்கி நிற்கும் பல நோயாளிகளின் முதலாந்தரப் பிரச்சினையே தம்  எதிர்காலம் குறித்த பயம் தான் என அப் பெண்ணுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் கூறினார்.  முதலில் அவருக்கு அளிக்கவேண்டியிருந்தது புற்று நோய்க்கல்ல இந்த மனப் பிராந்தியைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறார் அவர்.

தீர்க்க முடியாதென முடிவெடுக்கப்பட்ட நோய்களைக் கொண்டவர்களை மருத்துவ மனைகள் 'இறுதி நாட்களைக் குடும்பத்தோடு கழியுங்கள்' என சிகிச்சை ஏதுமின்றி வலி குறைக்கும் மருந்துகளோடு ஏதோ ஒரு அறையுள் போட்டு விடுவதே வழக்கம்.

இது ஒரு வகையில் கருணையற்ற கொலை எனவே நான் கருதுவதுண்டு. இந்த சீ.பீ.சீ. பெண்ணும் அப்படியான ஒருவர் தான். ஆனால் அவரும் ஒரு மருத்துவராக இருந்ததனால் இப்படியான பரீட்சார்த்த சிகிச்சை ஒன்றுக்கு உடன்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒன்றும் புதிதான விடயமல்ல. அறுபதுகளில் பொதுவாகக் களிப்பிற்காகப பாவிக்கும் எல்.எஸ்.டி போன்ற பரவசம் தரும் மருந்து தான். தமிழில் உன்மத்தம் எனப்படும் போதை தரும் வகை. இப்படியான மருந்துகள் மூலிகைகளில் இருந்து எடுக்கப்படுகின்றன. நமது நாட்டு வைத்தியத்தில் உள நோய் மற்றும் பேய் பிடித்தவர் எனப்படுபவர்களுக்குச் சிகிச்சை செய்ய  ஊமத்தை (உன்மத்தை) பாவிக்கப்படுவது வழக்கம்.

தென்னமெரிக்க சுதேசிகள் பெயோட்டி (பேயோட்டி?) மற்றும் மஜிக் மஷ்ரூம் போன்ற மூலிகைகளை இதற்காகப் பயந்படுத்துவார்கள். சீ.பீ.சீ. நிகழ்ச்சியில் வந்த பெண்ணுக்கு ‘மஜிக் மஷ்ரூம்’ எனப்படும் ஒருவகைக் காளானிலிருந்து எடுக்கப்பட்ட சைலோசைபான் (Psilocybin)  என்ற மருந்தே கொடுக்கப்பட்டது.

அதே சமயத்தில் இம் மருந்து இன்னுமொரு மன அழுத்த நோயாளிக்கும் பரீட்சார்த்த சிகிச்சைக்காகக் கொடுக்கப்பட்டது.

இரண்டு பேரினதும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இருவரும் இப் பரீட்சார்த்த சிகிச்சையால் நல்ல பெறுபேறுகளைப் பெற்றவர்களெனவே அவர்களது வாக்குமூலங்கள் இருந்தன. இருவருமே தம் எதிர்காலம் பற்றிய அச்சங்களைத துறந்திருந்தனர். வாழ்வு பற்றிய அவர்களது பார்வை முற்றிலும் மாற்றம் கண்டிருந்தது. சக மனிதர் மீதும் சூழல் மீதும் அதிக பாசம் கொண்டவர்களாகவும் மரணம் குறித்த எந்தவித அச்சமும் இல்லாதவர்களாகவும் எல்லாவற்றிலும் ஒருமைத்தன்மையைக்  (oneness) காண்பவர்களாகவும் காட்டிக் கொண்டனர். இருவரது உரையாடலுமே ஆன்மீக வலையத்தில் தான் இருந்தன.

எனது நண்பரும் இப்படியான ஆன்மீக வலயத்தில் இருந்து உரையாட முயற்சித்திருப்பாரோ? அவர் சார்ந்திருந்த கடவுள் மறுப்பு நண்பர்கள் கூடாரத்தில் அதற்கான வெளி இருந்திருக்காத நிலையில் அவரும் வாழ்வு குறித்த பயம் பற்றி யாருடனும் பேசிக்கொண்டாரா?

'நான் சிகிச்சை  பெற்றுக் கொண்டிருந்தபோது என் உடலுக்குள் 'பயம்' ஒளிந்துகொண்டிருந்தது. இருளான ஒரு பாதாள உலகத்துள் இருந்து அது என்னை உள்ளே இழுத்தது. அதை நான் ஏசிக் துரத்தி விட்டேன். அதன் பிறகு நான் ஒரு பிரகாசமான பால்வெளியில் கிரகம் கிரகமாகத் தாவிக் கொண்டிருந்தேன். எல்லாமே ஒன்று தான். பிரபஞ்சம் ஒன்றுதான். எனது உடலுக்கு ஆதி எது அந்தம் எது என்று தெரியாத நிலை.

நான் சிகிச்சையிலிருந்து மீண்ட பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. நான் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் நேசிக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கும் என்னைச் சூழவுள்ளனவற்றிற்கும் எந்தவித பேதமுமில்லை." என அந்தப் பெண் கூறினார்.

இப்படியான போதை மருத்துவம் பெற்ற பலரின் வாக்குமூலங்களின் பொதுமை என்னவென்றால் அவர்கள் தங்களை அறிந்துகொண்டதுதான் எனக் கூறுகிறார் சிகிச்சையளித்த மருத்துவர்.

மரணத் தருவாயில் இருப்பவர்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்ட முடியாது. இப்படியான பலவித வாக்குமூலங்கள் வரலாற்றில் நிறையவே உண்டு.

மாந்திரிகத்தினால் 'பேயகற்றி' சிகிச்சை பெற்றுக் குணமாகியவர்களின் கதைகளும் நிறையவுண்டு. கடவுள் நம்பிக்கையினால் குணமாகியவர்களின் கதைகளும் ஏராளமுண்டு.

சீ.பி.சீ. உரையாடலையும் நண்பரின் கதையையும் இணைத்துப் பொருத்தி அறிந்துகொண்டது. இதுதான். வாழ்வின் மீதுள்ள பிடிப்பு எவ்வளவோ அந்தளவுக்கு மரணம் குறித்த அச்சமும் இருக்கும். இந்த இரண்டிலிருந்தும் விடுபடுவதே உண்மையான சிகிச்சை. அதற்கான பாதை எது?

மாந்திரீகம், ஆன்மீகம், போதை மருந்து, எல்லாமுமே இறுதியில் மூளையின் இரசாயனத்திடம் தான் மண்டியிட வேண்டும். மனத்தால் முடியாதபோது தான் மற்றவை எல்லாம். விஞ்ஞானமும் ஆன்மீகமும்
குலாவிக் கொள்ளும் இந்த இடம்தானா பேரின்பத்தின் மூலஸ்தானம்?

தெரியாது ஆனால் நம்ப விரும்புகிறேன்.


செவ்வாய், 2 பிப்ரவரி, 2016


ஸ்டாலினின் முடிவு

சமீபத்தில் றோஸ்மேறி சுலிவன் எழுதிய ஸ்ராலினின் மகள் (Stalin’s Daughter) என்னும் புத்தகத்தை வாசித்தேன். ஸ்டாலினை ஒரு கொடுங்கோலர், சர்வாதிகாரி எந்நும் படிமங்களுடு பார்த்திருந்த எனக்கு இன்னூல் ஒருவித சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.

சோவியத் குடியரசு பற்றி மறைக்கப்பட்ட பக்கங்கள் பல.  ஸ்டாலினின் ரஷ்யா பற்றி நிறைய விடயங்களை ஸ்வெற்லானாவின் பிரதிபலிப்புக்களாக இப் புத்தகம் தருகிறது.

1926 இல் ரஷ்யாவில் பிறந்து கிரெம்லின் அரச மாளிகையில் வளர்ந்த ஸ்டாலினின் மகள் சுவெட்லானா தனது 85 வது வயதில் அமெரிக்காவில் தனிமையில் வறுமையில் மடிந்து போனார்.

ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எநவே வரலாறு சொல்கிறது. சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள் என்றுதான் எமக்குக் கற்பிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போதும் அப்படியொரு உண்ர்வுதான் மேல் நிற்கிறது. அத்ற்கும் மேலால் இந் நூலில் இன்னுமொரு நிழலுணர்வு ஸ்டாலினையும் அவர் சார்ந்த கம்யூனிச சித்தாந்தத்தையும் பின்புலத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. பிரச்சார சித்தரிப்புகள் என்று எதுவுமில்லை. வேண்டுமானால் ஸ்வெட்லானாவின் மீதான ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அவரது தவறுகளுக்கான காரணங்களையும் ரஷ்யா மீது சுமத்தும் முயற்சி தென்படலாம்.

தாம் வரித்துக் கொண்ட கொள்கைகளை நடைமுறைப் படுத்த ஸ்ராலின் கையாண்ட வழிமுறைகள் நாகரிக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை. 16, 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருந்த தொழிற் புரட்சி, நிலங்களை வளங்களாகக் கொண்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வறுமைக் கோடு, தன்நிறைவு பற்றிய பொருளாதார அளவுகோல்கள் பற்றி அறிந்திராத காலமது. நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார அணி சேர்தல் முடுக்கப்பட்ட நிலை. நகரமயமாக்கலும் இயந்திரமயமாக்கலும் மட்டுமே ஒரு நாட்டை முன்னிலையில் வைத்திருக்கும் எந்ற நம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்தது.

அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து லெனினின் நோக்கம் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான பலமான சோவியத் குடியரசை அமைப்பது. அதற்கமைய கட்சி நிறுவப்பட்ட விஞ்ஞாபனம் மிகவும் இறுக்கமானது. அதை நடைமுறைப்படுத்த எவர் முன்வந்திருப்பினும் அவர் சர்வாதிகாரியாகவே இருந்திருக்க வேண்டும். ஸ்டாலின் அதைக் கட்சியின் விருப்பிற்கமையச் செய்தார். அதற்காக அவர் விரும்பி இழந்தது பல, ஒருவர் ஸ்வெட்லானா.

ஸ்டாலினுக்கு ஸ்வெட்லானாவைத் தவிர இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர். ஆனாலும் ஸ்வெட்லானா மீது அவர் மிகவும் பிரியமும் கரிசனையும் கொண்டிருந்தார். ஜார் அரசரின் காலதில் போலவே மேற்தட்டு வர்க்கம் கல்வி பயிலும் பாடசாலையில் தான் ஸ்வெட்லானா கல்வி கற்றார். இலக்கியம், வரலாறு, ரஷ்ய கலாச்சாரம், மேடை இலக்கியம் கட்சி சித்தாந்தம் யாவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவ்ர் ஸ்வெட்லானா. அதனால் அவருக்கு நிறைய யூத-ரஷ்ய நண்பர்கள் கிடைத்தனர். அவர்களில் இருவரைத் திருமணமும் செய்துகொண்டார்.  பிள்ளைகளும் உண்டு. ஆனால் ஸ்டாலின் யூதரை வெறுப்பவர். அதனால் பேரப்பிள்ளைக்ளையும் வெறுத்தார்.

நகர மயமாக்கலின் போது விவசாயிகளின் நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டந. பஞ்சம் தலைவிரித்தாடியது. பல மில்லியந் மக்கள் பட்டினியால் மரணமடைந்தனர். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டோ குளிர் வலயங்கள் அல்லது தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டோ துன்பங்களை அனுபவித்தனர். கட்சியின் பேரிலும் நாட்டின் பேரிலும் இவைகள் நியாயமாக்கப்பட்டன. ஸ்டாலின் அப்போதும் சிறந்த தலைவராகவே சோவியத் மக்களால் கருதப்பட்டார்.

கட்சியின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் துரோகிகளாக்கப்பட்டு சிறை̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀̀களில் தள்ளப்பட்டனர். சிலருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதில் ஸ்டாலினின் மனைவியின் பெற்றோர், மனைவியின் தங்கை மற்றும் உறவினர் பலர்.

ஸ்டாலின் தனது இரண்டு ஆண் மக்களையும் போர் முனைக்கு அனுப்பினார். அவர்களில் ஒருவர் ஜேர்மானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட போது அவரை மீட்பதற்கு ஸ்டாலின் முயற்சி எடுக்க மறுத்துவிட்டார். கைதிகள் பரிமாற்றத்திகு ஜேர்மானியர் கேட்டபோது “ எல்லா சோவியத் கைதிகளும் எனது பிள்ளைகள் தான் என்று கூறி மறுத்துவிட்டார்.

கட்சியின் சித்தாந்தம் புனிதமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அதை நடைமுறைப் படுத்த கொடுத்த விலை பன்மடங்கு.

கட்சிக்கும் சரி கட்சியின் காவலர்களுக்கும் சரி கண்கள் இருண்டிருந்திருக்கலாம். மருண்டவர்கள் எல்லாம் எதிர்ப்புரட்சிக்காரர்களாகப் பட்டனர்.

எதிர்ப்புரட்சிக்காரரை இனம்காணும் பொறுப்பு மத்திய குழு உறுப்பினர் லவெண்றி பெரியா விடம் இருந்தது. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் பலர் அவர் பட்டியலில் இருந்தனர். ஸ்டாலினை மாசுபடுத்தி நாட்டைச் சிதைக்க எதிரிகள் முனையலாம் அதற்கு உகந்தவர்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களே என்றொரு கருத்தும் அதே வேளை ஸ்டாலினைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற பெரியா முயன்றிருக்கலாம் என்றொரு கருத்தும் இருந்ததாகத் தெரிகிறது.

எதுவானாலும் ஸ்டாலின் தான் இறுதிவரை நீதிமானாக நடந்து கொள்ள வேண்டுமென்பதனால் தான் தன் உறவினர்கள், நண்பர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்ட போதும் கருணை காட்ட் மறுத்துவிட்டார் என்ற கருத்து மேலோங்கி நின்றது எனவும் கருதப்பட்டது.

ஸ்டாலினின் முடிவு சடுதியானது. முதல் நாளிரவு மத்திய குழுவின் முக்கியஸ்தர்கள், குருஸ்சேவ் பெரியா ஈறாக, ஸ்டாலினின் வீட்டில் இரவுணவு உண்டபின்னர் மறுநாள் சுகவீனமுறுகிறார். கட்சியின் நடவடிக்கை காரணமாக ரஷ்யாவின் மிகச் சிறந்த மருத்துவர்கள் எதிர்ப்புரட்சிக்காரர்களெனச் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர் (‘Doctor Plot’). சிறந்த மருத்துவர் ஒருவருக்கு விடுதலையளிக்கப்பட்டு சிகிச்சைக்காகாக் கொண்டுவரப்பட்டார். உரிய காலத்தில் முறையான சிகிச்சையளிக்கப்படாமல் ஸ்டாலின் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது.

சில நாட்களில் பெரியா கைதுசெய்யபட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. குருஸ்சேவ் ஆட்சியில் அமர்கிறார். அவரது முதல் கடமை ஸ்டாலினைத் துரோகியாக்குவது. அவரால் சிறைவைக்கப்பட்டவ்ர்களை ‘குற்றங்கள் நிரூபிக்கப்பட முடியாமையால் விடுதலை பெற்றனர்.

மார்ச் மாதம் 5ம் திகதி, 1953 ம் ஆண்டு ஸ்டாலின் மரணமடைந்தார். மக்கள் அவரை வெறுத்தற்கான அடையாள்ம் ஏதுமின்றி ஸ்டாலினின் மரணச் சடங்கு சிறப்பாக நடந்தது.

ஸ்டாலின் நாட்டுடமையெனக் கூறி அவரது சொத்துக்கள் அரசினால் எடுக்கப்பட்டன. சுவெட்லானா தெருவில் விடப்பட்டார்.

ஸ்டாலின் ஒரு புரட்சிக்காரர். சர்வாதிகாரியாக வரவேண்டுமென்று அவர் நினைத்திருந்ததற்கான தடயங்கள் தெரியவில்லை ஆனால் அவரைக் கொடுங்கோலனாக மாற்றியதற்குரிய தடயங்கள் நிறையத் தெரிகின்றன. அதிலொன்று, சந்தேகம்.









வெள்ளி, 15 ஜனவரி, 2016

ஒரு குறிப்பு: வாசிப்பும் யோசிப்பும் / பதிவுகள் / வ.ந.கிரிதரன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

வாசிப்பும், யோசிப்பும் 138 : உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!! ; மின்னூல்கள் பற்றிய எழுத்தாளர் மாலனின் கூற்றும், அது பற்றிய சில எண்ணங்களும்....

E-mailPrintPDF
உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!

'எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவென்னும் இரவி!' -பாரதியார் -

இத்தாரக மந்திரத்துடன் மே-யூன்1998, யூலை-ஆகஸ்ட் 1998 என இரு இதழ்கள் ,டொராண்டோ, கனடாவில், வெளிவந்ததொரு மாதப்பத்திரிகைதான் இரவி. அக்காலகட்டத்தில் தொடர்ந்தும் வெளிவராது நின்று போனாலும், என் ஆர்வம் இன்றுவரை நின்று விடவில்லை. என் ஆர்வத்தின் வெளிப்பாடுகள்தாம் 'கணினி உலகம்', 'நமது பூமி' ஆகிய செய்திக்கடிதங்களும், 'குரல்' கையெழுத்துச்சஞ்சிகையும், 'இரவி', 'கல்வி' ஆகிய பத்திரிகைகளும் பதிவுகள் இணைய இதழும்.

'இரவி' பத்திரிகையின் முதற் பக்கத்திலுள்ள இரவி என்னும் பத்திரிகையின் எழுத்துருவினை வடிவமைத்துத் தந்தவர் எழுத்தாளர் 'அசை; சிவதாசன். அதற்காக அவருக்கு நன்றி. அவரும் அக்காலகட்டத்தில் மறுமொழி சஞ்சிகையினை வெளிக்கொணர்ந்தவர். இன்று வெளிவரும் 'தாய் வீடு' பத்திரிகையின் தாயான 'வீடு' பத்திரிகையினைத்தொடங்கி வெளியிட்டவர். சிறுகதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகளில் எழுதியவர். 'தாயகம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'அசை மறுபக்கம்' பத்தியின் மூலம் 'அசை' சிவதாசன் என்று அழைக்கப்பட்டவர். தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல் ஆய்வாளராக அடிக்கடி வலம் வருபவர். வெளிவந்த இரு இதழ்களுமே வடிவமைப்பிலிருந்து, தட்டச்சு செய்தது வரை என் பங்களிப்பே. அன்று கணினியில் தட்டச்சு செய்வதென்பது இன்று போல் அவ்வளவு இலகுவானதாக எனக்கிருக்கவில்லை. தமிழ் தட்டச்சுப்பலகையினைப்பாவிக்க வேண்டியிருந்தது. அந்த நிலையிலேயே என்னால் இரவியினைத்தட்டச்சு செய்து வெளிக்கொணர முடிந்தது இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியத்தைத்தருகின்றது. ஆனால் பத்திரிகையினை வெளிக்கொணர்வதிலிருந்த தீராத ஆர்வம்தான் அதனைச் சாத்தியமாக்கியது.

தற்போது மீண்டுமொரு ஆசை துளிர் விடத்தொடங்கியிருக்கிறது. ஏன் இரவியினை மீண்டுமொருமுறை உதிக்க வைக்கக்கூடாது? வைத்தாலென்ன? வரும் சித்திரை மாதமளவில் மீண்டும் இரவியினை மாதப்பத்திரிகையாக ஆரம்பிக்கலாமாவென்று எண்ணுகின்றேன். சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால் நிச்சயம் மீண்டுமொருமுறை 'இரவி' உதிக்கும். பார்ப்போம்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
இன்று 2016 இன் முதல் நாள். எல்லோருக்கும் இது நல்ல வருடமாக இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். பெரும்பாலான தீயனவும் கெட்டனவும் நடப்பதற்குக் காரணமே அக்காரியமாற்றுபவர்களுக்கு நல்லன நடக்காததனானாலே தான் என்று நான் நினைப்பதுண்டு. வறுமை களவைத் தூண்டுவது போல. இல்லாமை பொறாமையைத் தூண்டுவது போல. ஒவ்வாமை எரிச்சலைத் தூண்டுவது போல. இந்த வருடம் இருப்பதைப் பகிரெனக் கேட்காது எடுப்பதைக் குறையெனக் கேட்போம்.

எல்லோருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!