இறைவனுக்கு ஒரு வேண்டுதல்
தயவு செய்து
என் பிறப்பை அறுக்க வேண்டாம்
உன் பாதடி நிழலும் எனக்கு வேண்டாம்
முக்தியும் வேண்டாம்
என்னை என் மண்ணிலேயே மீண்டும் பிறக்க வை
என் தேசம், என் மண், என் பெற்றோர்
என் சகோதரர், என் உறவுகள், நண்பர்கள்
தென்னங்கீற்று, தென்றல் காற்று, திரை கடல்...
இன்னும் அனுபவித்து முடியாத
எச்சங்களை அனுபவிக்க
எனக்கு இன்னும் அவகாசம் தா
இந்த உலகமே எனது சொர்க்கம்
பி.கு.
என் மனைவிக்கும் பிள்ளைகட் கும்
அதே வரத்தைக் கொடு
உனக்குத் தெரியாதா என்ன?