மு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்
“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”
மு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.
இதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.
******
மு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார். 1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.
‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.
1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.
1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.
*******
மு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்;விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம். 1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம். அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம். அப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.
‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர். பிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல். இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.
இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.
ஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.
இங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள். இவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.
புpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.
“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் - அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.
வாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக?’
- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை. தான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய். இலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.
மு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.
ஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார். இவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற - இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.
தனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.
சர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார். புங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.
தனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார். புங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.
புங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன. இருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.
அவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.
அவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.
‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.
மு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.
(எனது இக் கட்டுரை புங்குடுதீவு பழைய மாணவர் சங்க 2006ம் ஆண்டு மலரில் பிரசுரமானது)
புதன், 9 மே, 2007
ஞாயிறு, 6 மே, 2007
பிசத்த்ப் போவது யார்?
பிசத்தப் போவது யார்?
மூன்றாவது தடவையாக விடுதலைப்புலிகளின் வான்படையினர் சிறீலங்காவின் இராணுவ இலக்குகளின்மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு பாதுகாப்பாக தாயகம் திரும்பியிருக்கின்றனர்.
முதலாவது தடவையாக வான் தாக்குதல் நடத்தப்பட்டபோது அதன் எதிர்வினைகள் பல முகாம்களிலிருந்தும் பல வடிவங்களிலும் வந்திருந்தன. புலிகளை விமர்சிப்பவர்களால் அது பூச்சாண்டியெனவும் ஆதரவாளர்களால் அது போராட்டத்தின் புதிய பரிமாணம் எனவும் கருத்துரைக்கப்பட்டது.
மூன்று தடவைகள் அதுவும் வெற்றிகரமாகப் புலிகள் எதிரியின் அதிபாதுகாப்புக் களங்களுக்கு இலகுவாகச் சென்று காரியங்களைக் கச்சிதமாக முடித்துவிட்டுத் திரும்பியிருப்பது நி;ச்சயம் பூச்சாண்டி ரகத்தில் பொருந்தாது.
கட்டுநாயக்கா வான்படைத் தளம், பலாலி கூட்டுப்படைத் தளம், கொலன்னாவ எரிபொருட் களஞ்சியம் என்று எல்லாமே ஒரு வகையில் இராணுவ இலக்குகள்தான். இந்த மூன்று தாக்குதல்களின்போதும் பொது மக்களின் உயிர்களோ உடமைகளோ தாக்கப்படவில்லை. இதிலிருந்து பல விடயங்கள் உய்த்துணரப்படலாம்.
முதலாவதாக, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வதுபோல புலிகளின் போராட்டத்தில் இது ஒரு நிச்சயமான பரிணாம வளர்ச்சியேதான். பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் புலிகள் சர்வதேசங்களின் தரங்களுக்கு அல்லது அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டனர். சிறார்களைப் படையில் சேர்த்தல் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்களில் புலிகளின் மீது சர்வதேசங்கள் முன்வைத்த அழுத்தங்களைப் புலிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தங்கள் களநிலவரங்களுக்கேற்ப அமைப்பின் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர். போராட்ட இயக்கமாக இருந்தபோது எந்த ஒரு வெளிநாட்டினதும் அறிவுறுத்தலை அவர்கள் ஏற்றுக் கொணடதில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செய்துகொண்டதற்குப் பின்னர் சர்வதேசங்களினதும் அவைசார்ந்த அமைப்புகக்களினதும் பரிந்துரைகளை அவர்கள் பரிசீலனை செய்ததன் காரணம் தாம் இப்போது போராட்ட அமைப்பில்லை மாறாக தாம் ஒரு நாட்டை ஆள்கிறோம் என்ற நினைப்பில்தான். சர்வதேசங்கள் சில பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதுவும் ஒருவகையில் ஒரு நாட்டிற்கு விடப்படுகின்ற வேண்டுகோள்களெனவே பார்க்கப்பட்டது.
எனவே, சர்வதேசங்களின் வேண்டுகோள்களோ, கட்டளைகளோ, பரிந்துரைகளோ எதுவாகவிருந்தாலும் அதை முன்வைப்பதும் அதைப் பரிசீலிப்பதும், நடைமுறைப்படுத்துவதும்கூட ஒருவகையில் தேசமொன்றைச் சர்வதேசங்கள் அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளே. அந்த வகையில் புலிகள் நிச்சயம் மாறியிருக்கிறார்கள். அது ஒரு படிமுறை வளர்ச்சி.
இரண்டாவதாக, புலிகளின் இவ்வான் தாக்குதல்கள் அவர்களது பலத்தை எடுத்துக்காட்டியது மட்டுமல்ல இலங்கை ஆட்சியாளரினதும், இராணுவத்தினதும் பலவீனங்களை மிகவும் துலாம்பரமாக தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேசங்களுக்கும் எடுத்துக் காட்டியிருக்கிறது. 13000 கோடி ரூபாக்களை ஒதுக்கி நாட்டின் வரவு செலவில் பெரும்பகுதியைப் போருக்காகச் செலவு செய்து கொண்டு மேலும் மேலும் அபிவிருத்திக்கென உலக நாடுகளிடம் கையேந்திப் பெறும் பணத்தை வாரியிறைத்து உலகின் அதி பெரிய அமைச்சரவையைக் கொண்ட ஆட்சியினாலேயே சிறிய ரக விமானங்களாலான விமானப்படையைக் கண்டுகொள்ள முடியாமற் போனது, அதுவும் மூன்று தடவைகள், வெட்கப்படும் விடயம். சர்வதேசங்களின் முற்றங்களில் இலங்கை ஆட்சியாளர் அவமானப்பட்டுப் போயிருக்கின்றனர்.
மூன்றாவதாக, சமீப காலங்களில் சிறீலங்காவின் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தன்னைச்சுற்றி உருவாக்கிய ‘கைமுனு’ பிம்பம், தானே சிங்கள இனத்தைக் காப்பாற்றப் பிறந்த ஒரே தலைவர் என்று தன்னைச்சுற்றி அவர் உருவாக்கிய செயற்கை ஒளிவட்டம் எல்லாமே கண் முன்னால் தகர்க்கப்படும் நிலைமை. தனது பரிவாரங்களின் பரப்புரைகளில் தானே மயங்கி புது வருடத்தில் கிழக்கையும் அதன் பிறகு மூன்று வருடங்களுக்குள் வடக்கையும் பிடித்து புலிகளைக் கொன்றொழித்து விடுவதாக அவர் செய்த சவால்கள் எதுவுமே நிறைவேறாமற் போகும் நிலைமை. தென்னிலங்கை மக்களால் விரைவிலேயே தூக்கியெறியப்படும் அபாயம் என்று பலவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாபம் மஹிந்தவுக்கு.
இவற்றுக்கு அப்பால் பல இராணுவ மேதைகளே ஆச்சரியப்படுமளவுக்கு உலக நாடுகளால் அதி சிறந்த திட்டமிடலாளர் (the best strategist) என்று வர்ணிக்கப்படும் புலிகளின் தலைவர் பேச்சிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது செயலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே புலிகளின் இன்றய விமானப்படை. மாறாக தென்னிலங்கை அரசியல்வாதிகளுஞ்சரி இராணுவ அதிகாரிகளுஞ்சரி செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட பேச்சுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே பலம் குன்றிப் போயிருக்கும் அவர்களது மொத்த இராணுவம்.
புலிகள் சமீப காலங்களில் பல களங்களிலிருந்து பின்வாங்கியபோது அதை அவர்களது பலவீனமாக அரசும் அதன் சாதனங்களும் நம்பித் தென்னிலங்கை மக்களைத் தமது பரப்புரைகளால் வென்றெடுத்திருந்தனர். அதே வேளை புலிகளும் தம்மிடமிருக்கும் நவீன ஆயுதங்கள் எதையும் பாவிக்காது பலவிடங்களில் தாம் பலவீனப்பட்டுவிட்டோம் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டைத் தமிழ் மக்களிடமும் பரவ விட்டிருந்தார்கள். ‘ஏன் இன்னும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். திருப்பித் தாக்குவதற்கு முடியவில்லைப் போலிருக்கிறது’ என்று மக்கள் நம்புமளவுக்கு காரியங்கள் நடைபெற்றன. இவையெல்லாமே வியூக மாற்றத்தின் போதான நடவடிக்கைகள் என்பதை இப்போது புலிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
புலிகளின் முதலாவது விமானப்படையின் தாக்குதலின் பின்னர் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனாலும் அதன் பின்னரே பலாலி கூட்டுப்படைத் தலைமையகமும், இப்போது கொழும்பு தலைநகர் மற்றும் சுற்றுப்புறங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு எந்தவகையிலும் அதிகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எந்தவிதமான ரேடார்களோ, விமான எதிர்ப்புச் சாதனங்களோ வான் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படவில்லை. நகரம் இரண்டு தடவைகள் விமானத் தாக்குதலைச் சந்தித்திருந்தும் இரண்டு தடவைகளிலும் மின்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தும் பிரத்தியேக ஜெனறேட்டர்கள் தாராளமாகப் பாவனையிலிருந்தன என்கிறார்கள். மேற்கு நாடுகளிற் கையாளப்படும் போர்க்கால ட்றில்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பின் இந்த மாதிரியான விடயங்கள் அறியப்பட்டு தவிர்க்கப்பட்டிருக்கும். அது நடைபெறவில்லை.
மார்ச் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத் தளம் தாக்கப்பட்ட பி;ன்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அமெரிக்கா இந்தியா Nபுhன்ற நாடுகள் வலியுறுத்தியிருந்தன. நவீன ஆயுதங்களை மிகவும் மலிவாகத் (இலவசமாக?) தருவதற்கு சீனாவும் பாகிஸ்தானும் முண்டியடித்துக் கொண்டு வந்தன. கட்டுநாயக்காவில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடார் சரியாகத் தொழிற்படவில்லை என்ற குற்றச்சாட்டை அரசு முன் வைத்தாலும். அது இயங்கு நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை பின்னர் ரணில் விக்கிரமசிங்கவினால் தரப்பட்டது. சிறீலங்காவிடம் தற்போதுள்ள விமானங்கள் இரவு நேரப் பறப்புக்களைச் செய்யவல்ல பார்வைக் கருவிகள் பொருத்தப்படாததால் அவற்றினால் புலிகளின் வான்கலங்களை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறது. விண்ணிலிருந்து விண் தாக்கும் வல்லமையுள்ள விமானங்கள் அரசிடம் இல்லை. நிலத்திலிருந்து விண்ணைத் தாக்கும் பீரங்கிகள் குறிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிலைகொண்டுள்ளன. அவையும் இயங்கு நிலையில் வைக்கப்படவில்லை எனவும் வதந்திகள் கிடைத்தன. இப்படியான பல விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்தனர் என்பது மட்டுமல்ல படையினரின் அசமந்தப் போக்கு, உஷார் இல்லாமை போன்ற விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்ததுடன் சரியான தருணங்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தும் விவேகத்தையும் அவர்கள் கொண்டிருப்பதே தொடரும் அவர்களது வான்படை வெற்றிகளுக்குக் காரணம். அத்தோடு அதி நவீன பாதுகாப்பு, போர்ச் சாதனங்களைப் பற்றிய அறிவும் அதை எங்கிருந்தும் பெற்றுக் கொண்டு சுய பயிற்சிகளின் மூலம் அவற்றை வெற்றிகரமாகக் கையாளப் பழகிக் கொள்வதும் புலிகளின் சிறப்புப் பண்பு. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் புலிகளின் அலுவலகத்துக்குச் சென்ற ஒரு ஊடகவியலாளர் கூறிய கூற்று. நவீன போர்க கருவிகளின் சந்தை வருகை பற்றியும், மற்றும் உலக இராணுவங்கள் பற்றிய சமகால ஆய்வுகள் பற்றியும் விபரங்களைத் தரும் ‘ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி’ (Jane's Defence Weekly) என்ற வாராந்தர சஞ்சிகையின் பல பிரதிகள் புலிகளின் அலுவலகத்தில் பெருந்தொகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன என்று அந்த ஊடகவியலாளர் எழுதியிருந்தார்.
அதே வேளை உலகில் நடைபெறும் பெரும்பாலான போராட்டங்கள் பற்றியும் உலகப் போர்கள் நடாத்தப்பட்ட முறைகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பல நூல்களையும் வீடியோக்களையும் தருவித்து அறிந்துகொள்பவர் என்கின்ற கருத்து பொதுவாகவே உண்டு. அத்தோடு சாண்டில்யனின் கடற்புறா போன்ற நூல்களிலிருந்து பெறப்பட்ட சில போர்த்தந்திரங்கள் புலிகளின் பல போர்களில் பிரயோகிக்கப்பட்டது. ஆனையிறவு தரையிறக்கத்தின் காலத் தெரிவின் பின்னணியில் சாண்டில்யனின் கடற்புறா இருந்திருக்கிறது.
தற்போதய வான்படையின் உருவாக்கத்தின் பின்னணியிலும் பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. வான் கலங்களை இறக்குமதி செய்தது முதல் அவற்றின் ஓட்டிகளைப் பயிற்றுவித்தது வரை பல ஆச்சரியமான விடயங்கள் புலிகளிடமுண்டு. புலிகள் நவீன கருவிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்வதோடு இருந்துவிடுவதில்லை. அக்கருவிகளைத் தமது கள நிலைகளுக்கேற்ப மாற்றியமைப்பது முதல் அவற்றின் திறன்களை அதிகரிக்கச் செய்வதுவரை பல தொழில் நுட்ப சாதனைகளை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். (சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இரவுப் பார்வைக் கருவிகளை வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றத்தில் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.) இக்கருவிகளைக் கொண்டே இரவுநேரப் பறப்பு மேற்கொள்ளப்படுகிறது. புலிகளின் வான் கலங்களிற் பெரும்பாலானவை உள்நாட்டு உற்பத்தியாகவிருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கு நாடுகளில் சாதாரண சிறியரக மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைப் பாவித்து பொழுபோக்கு பறப்புக்கான சாதனங்களை உருவாக்குவது வழக்கம். அதே போன்று இயக்கங்கள் ஆரம்பித்த காலத்தில் வெளி நாடுகளில் தங்கியிராத சுதந்திரப் போராட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற கொள்கையோடு பல இயங்கின. புலிகள் இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
தற்போதய நிலையில் இலங்கை அரசுக்கு பல வழிகளிலும் பண உதவியும், ஆயுத உதவியும், ஆளுதவியும் தரப் பலநாடுகளும் முன்வருகின்றன. ஆனால் புலிகளுக்கு இப்படியான உதவிசெய்வதற்காக விரும்பனாலும் செய்ய முடியாத நிலைக்கு பல நாடுகள் தளள்ப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் நியாமான பல போராட்டங்கள் முடக்கப்பட்டு விட்டன. இவற்றின் பெரும்பாலான அழிவுக்குக் காரணம் அவை வேறு நாடுகளின் தயவில் வாழ்ந்தமையே. அந்த வகையில் புலிகள் தமது போராட்டத்தைத் தமது கள நிலவரங்களுக்கேற்ப சுதேச வளங்களுக்கு இசைவாக்கப்பட்ட வகையில் வடிவமைத்துக் கொள்கிறார்கள். பல மாற்று வழிகளையும் உத்திகளையும் கண்டுபிடிப்பதன் மூலம் (inழெஎயவiஎந) தமது போரியல், வாழ்வியல் முறைகளை உள்ளுர்க்களநிலைகளுக்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். கடற்புறா, பொன்னியின் செல்வன் போன்ற நூல்களின் பங்கும் இவற்றுக்குத் துணைபோயிருக்கிறது என்பதே புலிகளின் சுயநம்பிக்கையின் எடுத்துக்காட்டு.
அதே வேளை புலிகள் பல நாடுகளால் ‘புறக்கணிக்கப்’ படுவதற்கும் அவர்களது சுதேசிய மனப்பான்மையே காரணம். உலகில் நடைபெற்ற பல (சுதந்திரப்) போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கும் வெற்றிகளற்று முடித்து வைக்கப் பட்டமைக்கும் வெளி நாடுகளே காரணம். தமது நோக்கம் நிறைவேறும் வரைக்குமே அவர்களது உதவி நிலைத்திருக்கும். வெற்றிகரமான தீர்வுக்கு உதாரணமான தென்னாபிரிக்காவின் சுதந்திரம் ஒரு உள்நாட்டு உற்பத்தி. துணிச்சலான தலைமைக்கு அது ஒரு எடுத்துக்காட்டு. இந்த உண்மையை முற்றாக உணர்ந்து புலிகள் ஆரம்பத்திலிருந்தே தமது போராட்டத்தைத் தாமே வடிவமைத்து, நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். முற்று முழுதாக ஈழத் தமிழர்களை மட்டுமே நம்பி இப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. வெளிநாடுகளின் பார்வையில் நிலை குத்தி நின்று கொண்டிருக்கும் ஈழ தேசத்தின் வளங்களைத் தாரை வார்த்துக் கொடுக்க புலிகள் தயாரானால் நாளையே ஈழம் பெற்றுக் கொடுக்கப்படும். இன்றய புலிகளின் தலைமையில் அது நடக்காது. அதுவே புலிகள் இன்று தனிமைப் படுத்தப்பட்டமைக்குக் காரணம். அதுவே அவர்களது வெற்றியும் தோல்வியும்.
ஈழ தேசம் உருவாகுவதானால் அதற்கு இந்திய அங்கீகாரம் வேண்டும். காரணம் அரசியல், பொருளாதாரம் சம்பந்தப்பட்டதல்ல. அவர்கள் ஈழத்திற்குப் பாதுகாப்புத் தரவேண்டியதுமல்ல. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்னுமொரு வல்லரசு நுழைவதற்கு ஈழம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே. ஈழ தேசம் தன் மக்களைத் தானே பார்த்துக்கொள்ளும். பிராந்தியத்தைப் பாதுகாப்பதே இந்தியாவின் தேவை. ஈழத்தால் இந்தியாவுக்கோ அல்லது பிரிந்து போன பின்னர் சிறீலங்காவிற்கோ அல்லது வேறெந்த நாடுகளுக்கோ ஆபத்து ஏற்படுமென்று யாராவது கூறின் அது முட்டாளின் கூற்றாகவே இருக்கும். சிங்கப்பூரைப் போல அயல் நாடுகளோடு ஒற்றுமையாக இருக்கும் ஒரு நாடாகNவு ஈழம் இருக்கும்.
எனவே இனிவரும் வாரங்கள், மாதங்கள் ஒரு தீர்வுக்கான இறுதிப் போராட்டத்தைக் காணும் காலங்களாகவே அமையும். போராட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும். அது சிங்கள மக்கள் மீதான நேரடியான தாக்குதலாக இருக்காது. அரசியல், பொருளாதார, இராணுவ இலக்குகளையே குறி வைத்து புலிகள் போராட்டத்தைத் தொடர்வார்கள். ஆனால் கிழக்கில் நிலைமை வேறுவிதமானதாக அமையலாம். பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக அமையலாம். புலிகள் அதற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள்.
இதைத் தடுத்து நிறுத்தும் வல்லமை தென்னிலங்கை மக்களிடம்; மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளை நிதானமாகச் சிந்திக்க வைக்குமளவுக்கு சிங்கள மக்களிடமிருந்து போதுமான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும ஆனால் அரசியல்வாதிகளை ஊக்குவிப்பது போலவே அவர்கள்; செயற்படுகிறார்கள். இன்றுவரை எந்தவொரு அரசியற் தீர்வுக்காகவும் நம்பிக்கை வைத்து உழைக்காதவர் என்ற வகையில் மஹிந்தவிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அதற்கு மாற்றீடான ரணில் அரசு நாட்டையே அடகு வைத்து விடும். அது வரையில் இந்தியாவினால் அனுராதபுரத்தில் பூசைபோட்டு ஆரம்பித்து வைத்த இரத்தக் களரி தொடரவே செய்யும். துணிச்சலான ஒரு னந ஊடநசம தென்னிலங்கையில் உருவாகும் வரை.
இதற்கு ஒரே முடிவு ஈழம் தான். அது சிசேரியனா அல்லது இயற்கைப் பிறப்பா என்பது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது.
அது வரையில் (அடுத்ததாகப்) ‘பிசத்தப் போவது யார்?’
(எனது இக் கட்டுரை மே மாத 'தாய் வீடு' பத்திரிகையில் பிரசுரமானது)
மூன்றாவது தடவையாக விடுதலைப்புலிகளின் வான்படையினர் சிறீலங்காவின் இராணுவ இலக்குகளின்மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு பாதுகாப்பாக தாயகம் திரும்பியிருக்கின்றனர்.
முதலாவது தடவையாக வான் தாக்குதல் நடத்தப்பட்டபோது அதன் எதிர்வினைகள் பல முகாம்களிலிருந்தும் பல வடிவங்களிலும் வந்திருந்தன. புலிகளை விமர்சிப்பவர்களால் அது பூச்சாண்டியெனவும் ஆதரவாளர்களால் அது போராட்டத்தின் புதிய பரிமாணம் எனவும் கருத்துரைக்கப்பட்டது.
மூன்று தடவைகள் அதுவும் வெற்றிகரமாகப் புலிகள் எதிரியின் அதிபாதுகாப்புக் களங்களுக்கு இலகுவாகச் சென்று காரியங்களைக் கச்சிதமாக முடித்துவிட்டுத் திரும்பியிருப்பது நி;ச்சயம் பூச்சாண்டி ரகத்தில் பொருந்தாது.
கட்டுநாயக்கா வான்படைத் தளம், பலாலி கூட்டுப்படைத் தளம், கொலன்னாவ எரிபொருட் களஞ்சியம் என்று எல்லாமே ஒரு வகையில் இராணுவ இலக்குகள்தான். இந்த மூன்று தாக்குதல்களின்போதும் பொது மக்களின் உயிர்களோ உடமைகளோ தாக்கப்படவில்லை. இதிலிருந்து பல விடயங்கள் உய்த்துணரப்படலாம்.
முதலாவதாக, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வதுபோல புலிகளின் போராட்டத்தில் இது ஒரு நிச்சயமான பரிணாம வளர்ச்சியேதான். பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் புலிகள் சர்வதேசங்களின் தரங்களுக்கு அல்லது அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டனர். சிறார்களைப் படையில் சேர்த்தல் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்களில் புலிகளின் மீது சர்வதேசங்கள் முன்வைத்த அழுத்தங்களைப் புலிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தங்கள் களநிலவரங்களுக்கேற்ப அமைப்பின் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர். போராட்ட இயக்கமாக இருந்தபோது எந்த ஒரு வெளிநாட்டினதும் அறிவுறுத்தலை அவர்கள் ஏற்றுக் கொணடதில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செய்துகொண்டதற்குப் பின்னர் சர்வதேசங்களினதும் அவைசார்ந்த அமைப்புகக்களினதும் பரிந்துரைகளை அவர்கள் பரிசீலனை செய்ததன் காரணம் தாம் இப்போது போராட்ட அமைப்பில்லை மாறாக தாம் ஒரு நாட்டை ஆள்கிறோம் என்ற நினைப்பில்தான். சர்வதேசங்கள் சில பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதுவும் ஒருவகையில் ஒரு நாட்டிற்கு விடப்படுகின்ற வேண்டுகோள்களெனவே பார்க்கப்பட்டது.
எனவே, சர்வதேசங்களின் வேண்டுகோள்களோ, கட்டளைகளோ, பரிந்துரைகளோ எதுவாகவிருந்தாலும் அதை முன்வைப்பதும் அதைப் பரிசீலிப்பதும், நடைமுறைப்படுத்துவதும்கூட ஒருவகையில் தேசமொன்றைச் சர்வதேசங்கள் அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளே. அந்த வகையில் புலிகள் நிச்சயம் மாறியிருக்கிறார்கள். அது ஒரு படிமுறை வளர்ச்சி.
இரண்டாவதாக, புலிகளின் இவ்வான் தாக்குதல்கள் அவர்களது பலத்தை எடுத்துக்காட்டியது மட்டுமல்ல இலங்கை ஆட்சியாளரினதும், இராணுவத்தினதும் பலவீனங்களை மிகவும் துலாம்பரமாக தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேசங்களுக்கும் எடுத்துக் காட்டியிருக்கிறது. 13000 கோடி ரூபாக்களை ஒதுக்கி நாட்டின் வரவு செலவில் பெரும்பகுதியைப் போருக்காகச் செலவு செய்து கொண்டு மேலும் மேலும் அபிவிருத்திக்கென உலக நாடுகளிடம் கையேந்திப் பெறும் பணத்தை வாரியிறைத்து உலகின் அதி பெரிய அமைச்சரவையைக் கொண்ட ஆட்சியினாலேயே சிறிய ரக விமானங்களாலான விமானப்படையைக் கண்டுகொள்ள முடியாமற் போனது, அதுவும் மூன்று தடவைகள், வெட்கப்படும் விடயம். சர்வதேசங்களின் முற்றங்களில் இலங்கை ஆட்சியாளர் அவமானப்பட்டுப் போயிருக்கின்றனர்.
மூன்றாவதாக, சமீப காலங்களில் சிறீலங்காவின் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தன்னைச்சுற்றி உருவாக்கிய ‘கைமுனு’ பிம்பம், தானே சிங்கள இனத்தைக் காப்பாற்றப் பிறந்த ஒரே தலைவர் என்று தன்னைச்சுற்றி அவர் உருவாக்கிய செயற்கை ஒளிவட்டம் எல்லாமே கண் முன்னால் தகர்க்கப்படும் நிலைமை. தனது பரிவாரங்களின் பரப்புரைகளில் தானே மயங்கி புது வருடத்தில் கிழக்கையும் அதன் பிறகு மூன்று வருடங்களுக்குள் வடக்கையும் பிடித்து புலிகளைக் கொன்றொழித்து விடுவதாக அவர் செய்த சவால்கள் எதுவுமே நிறைவேறாமற் போகும் நிலைமை. தென்னிலங்கை மக்களால் விரைவிலேயே தூக்கியெறியப்படும் அபாயம் என்று பலவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாபம் மஹிந்தவுக்கு.
இவற்றுக்கு அப்பால் பல இராணுவ மேதைகளே ஆச்சரியப்படுமளவுக்கு உலக நாடுகளால் அதி சிறந்த திட்டமிடலாளர் (the best strategist) என்று வர்ணிக்கப்படும் புலிகளின் தலைவர் பேச்சிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது செயலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே புலிகளின் இன்றய விமானப்படை. மாறாக தென்னிலங்கை அரசியல்வாதிகளுஞ்சரி இராணுவ அதிகாரிகளுஞ்சரி செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட பேச்சுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே பலம் குன்றிப் போயிருக்கும் அவர்களது மொத்த இராணுவம்.
புலிகள் சமீப காலங்களில் பல களங்களிலிருந்து பின்வாங்கியபோது அதை அவர்களது பலவீனமாக அரசும் அதன் சாதனங்களும் நம்பித் தென்னிலங்கை மக்களைத் தமது பரப்புரைகளால் வென்றெடுத்திருந்தனர். அதே வேளை புலிகளும் தம்மிடமிருக்கும் நவீன ஆயுதங்கள் எதையும் பாவிக்காது பலவிடங்களில் தாம் பலவீனப்பட்டுவிட்டோம் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டைத் தமிழ் மக்களிடமும் பரவ விட்டிருந்தார்கள். ‘ஏன் இன்னும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். திருப்பித் தாக்குவதற்கு முடியவில்லைப் போலிருக்கிறது’ என்று மக்கள் நம்புமளவுக்கு காரியங்கள் நடைபெற்றன. இவையெல்லாமே வியூக மாற்றத்தின் போதான நடவடிக்கைகள் என்பதை இப்போது புலிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
புலிகளின் முதலாவது விமானப்படையின் தாக்குதலின் பின்னர் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனாலும் அதன் பின்னரே பலாலி கூட்டுப்படைத் தலைமையகமும், இப்போது கொழும்பு தலைநகர் மற்றும் சுற்றுப்புறங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு எந்தவகையிலும் அதிகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எந்தவிதமான ரேடார்களோ, விமான எதிர்ப்புச் சாதனங்களோ வான் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படவில்லை. நகரம் இரண்டு தடவைகள் விமானத் தாக்குதலைச் சந்தித்திருந்தும் இரண்டு தடவைகளிலும் மின்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தும் பிரத்தியேக ஜெனறேட்டர்கள் தாராளமாகப் பாவனையிலிருந்தன என்கிறார்கள். மேற்கு நாடுகளிற் கையாளப்படும் போர்க்கால ட்றில்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பின் இந்த மாதிரியான விடயங்கள் அறியப்பட்டு தவிர்க்கப்பட்டிருக்கும். அது நடைபெறவில்லை.
மார்ச் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத் தளம் தாக்கப்பட்ட பி;ன்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அமெரிக்கா இந்தியா Nபுhன்ற நாடுகள் வலியுறுத்தியிருந்தன. நவீன ஆயுதங்களை மிகவும் மலிவாகத் (இலவசமாக?) தருவதற்கு சீனாவும் பாகிஸ்தானும் முண்டியடித்துக் கொண்டு வந்தன. கட்டுநாயக்காவில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடார் சரியாகத் தொழிற்படவில்லை என்ற குற்றச்சாட்டை அரசு முன் வைத்தாலும். அது இயங்கு நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை பின்னர் ரணில் விக்கிரமசிங்கவினால் தரப்பட்டது. சிறீலங்காவிடம் தற்போதுள்ள விமானங்கள் இரவு நேரப் பறப்புக்களைச் செய்யவல்ல பார்வைக் கருவிகள் பொருத்தப்படாததால் அவற்றினால் புலிகளின் வான்கலங்களை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறது. விண்ணிலிருந்து விண் தாக்கும் வல்லமையுள்ள விமானங்கள் அரசிடம் இல்லை. நிலத்திலிருந்து விண்ணைத் தாக்கும் பீரங்கிகள் குறிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிலைகொண்டுள்ளன. அவையும் இயங்கு நிலையில் வைக்கப்படவில்லை எனவும் வதந்திகள் கிடைத்தன. இப்படியான பல விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்தனர் என்பது மட்டுமல்ல படையினரின் அசமந்தப் போக்கு, உஷார் இல்லாமை போன்ற விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்ததுடன் சரியான தருணங்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தும் விவேகத்தையும் அவர்கள் கொண்டிருப்பதே தொடரும் அவர்களது வான்படை வெற்றிகளுக்குக் காரணம். அத்தோடு அதி நவீன பாதுகாப்பு, போர்ச் சாதனங்களைப் பற்றிய அறிவும் அதை எங்கிருந்தும் பெற்றுக் கொண்டு சுய பயிற்சிகளின் மூலம் அவற்றை வெற்றிகரமாகக் கையாளப் பழகிக் கொள்வதும் புலிகளின் சிறப்புப் பண்பு. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் புலிகளின் அலுவலகத்துக்குச் சென்ற ஒரு ஊடகவியலாளர் கூறிய கூற்று. நவீன போர்க கருவிகளின் சந்தை வருகை பற்றியும், மற்றும் உலக இராணுவங்கள் பற்றிய சமகால ஆய்வுகள் பற்றியும் விபரங்களைத் தரும் ‘ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி’ (Jane's Defence Weekly) என்ற வாராந்தர சஞ்சிகையின் பல பிரதிகள் புலிகளின் அலுவலகத்தில் பெருந்தொகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன என்று அந்த ஊடகவியலாளர் எழுதியிருந்தார்.
அதே வேளை உலகில் நடைபெறும் பெரும்பாலான போராட்டங்கள் பற்றியும் உலகப் போர்கள் நடாத்தப்பட்ட முறைகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பல நூல்களையும் வீடியோக்களையும் தருவித்து அறிந்துகொள்பவர் என்கின்ற கருத்து பொதுவாகவே உண்டு. அத்தோடு சாண்டில்யனின் கடற்புறா போன்ற நூல்களிலிருந்து பெறப்பட்ட சில போர்த்தந்திரங்கள் புலிகளின் பல போர்களில் பிரயோகிக்கப்பட்டது. ஆனையிறவு தரையிறக்கத்தின் காலத் தெரிவின் பின்னணியில் சாண்டில்யனின் கடற்புறா இருந்திருக்கிறது.
தற்போதய வான்படையின் உருவாக்கத்தின் பின்னணியிலும் பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. வான் கலங்களை இறக்குமதி செய்தது முதல் அவற்றின் ஓட்டிகளைப் பயிற்றுவித்தது வரை பல ஆச்சரியமான விடயங்கள் புலிகளிடமுண்டு. புலிகள் நவீன கருவிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்வதோடு இருந்துவிடுவதில்லை. அக்கருவிகளைத் தமது கள நிலைகளுக்கேற்ப மாற்றியமைப்பது முதல் அவற்றின் திறன்களை அதிகரிக்கச் செய்வதுவரை பல தொழில் நுட்ப சாதனைகளை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். (சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இரவுப் பார்வைக் கருவிகளை வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றத்தில் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.) இக்கருவிகளைக் கொண்டே இரவுநேரப் பறப்பு மேற்கொள்ளப்படுகிறது. புலிகளின் வான் கலங்களிற் பெரும்பாலானவை உள்நாட்டு உற்பத்தியாகவிருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கு நாடுகளில் சாதாரண சிறியரக மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைப் பாவித்து பொழுபோக்கு பறப்புக்கான சாதனங்களை உருவாக்குவது வழக்கம். அதே போன்று இயக்கங்கள் ஆரம்பித்த காலத்தில் வெளி நாடுகளில் தங்கியிராத சுதந்திரப் போராட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற கொள்கையோடு பல இயங்கின. புலிகள் இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
தற்போதய நிலையில் இலங்கை அரசுக்கு பல வழிகளிலும் பண உதவியும், ஆயுத உதவியும், ஆளுதவியும் தரப் பலநாடுகளும் முன்வருகின்றன. ஆனால் புலிகளுக்கு இப்படியான உதவிசெய்வதற்காக விரும்பனாலும் செய்ய முடியாத நிலைக்கு பல நாடுகள் தளள்ப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் நியாமான பல போராட்டங்கள் முடக்கப்பட்டு விட்டன. இவற்றின் பெரும்பாலான அழிவுக்குக் காரணம் அவை வேறு நாடுகளின் தயவில் வாழ்ந்தமையே. அந்த வகையில் புலிகள் தமது போராட்டத்தைத் தமது கள நிலவரங்களுக்கேற்ப சுதேச வளங்களுக்கு இசைவாக்கப்பட்ட வகையில் வடிவமைத்துக் கொள்கிறார்கள். பல மாற்று வழிகளையும் உத்திகளையும் கண்டுபிடிப்பதன் மூலம் (inழெஎயவiஎந) தமது போரியல், வாழ்வியல் முறைகளை உள்ளுர்க்களநிலைகளுக்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். கடற்புறா, பொன்னியின் செல்வன் போன்ற நூல்களின் பங்கும் இவற்றுக்குத் துணைபோயிருக்கிறது என்பதே புலிகளின் சுயநம்பிக்கையின் எடுத்துக்காட்டு.
அதே வேளை புலிகள் பல நாடுகளால் ‘புறக்கணிக்கப்’ படுவதற்கும் அவர்களது சுதேசிய மனப்பான்மையே காரணம். உலகில் நடைபெற்ற பல (சுதந்திரப்) போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கும் வெற்றிகளற்று முடித்து வைக்கப் பட்டமைக்கும் வெளி நாடுகளே காரணம். தமது நோக்கம் நிறைவேறும் வரைக்குமே அவர்களது உதவி நிலைத்திருக்கும். வெற்றிகரமான தீர்வுக்கு உதாரணமான தென்னாபிரிக்காவின் சுதந்திரம் ஒரு உள்நாட்டு உற்பத்தி. துணிச்சலான தலைமைக்கு அது ஒரு எடுத்துக்காட்டு. இந்த உண்மையை முற்றாக உணர்ந்து புலிகள் ஆரம்பத்திலிருந்தே தமது போராட்டத்தைத் தாமே வடிவமைத்து, நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். முற்று முழுதாக ஈழத் தமிழர்களை மட்டுமே நம்பி இப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. வெளிநாடுகளின் பார்வையில் நிலை குத்தி நின்று கொண்டிருக்கும் ஈழ தேசத்தின் வளங்களைத் தாரை வார்த்துக் கொடுக்க புலிகள் தயாரானால் நாளையே ஈழம் பெற்றுக் கொடுக்கப்படும். இன்றய புலிகளின் தலைமையில் அது நடக்காது. அதுவே புலிகள் இன்று தனிமைப் படுத்தப்பட்டமைக்குக் காரணம். அதுவே அவர்களது வெற்றியும் தோல்வியும்.
ஈழ தேசம் உருவாகுவதானால் அதற்கு இந்திய அங்கீகாரம் வேண்டும். காரணம் அரசியல், பொருளாதாரம் சம்பந்தப்பட்டதல்ல. அவர்கள் ஈழத்திற்குப் பாதுகாப்புத் தரவேண்டியதுமல்ல. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்னுமொரு வல்லரசு நுழைவதற்கு ஈழம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே. ஈழ தேசம் தன் மக்களைத் தானே பார்த்துக்கொள்ளும். பிராந்தியத்தைப் பாதுகாப்பதே இந்தியாவின் தேவை. ஈழத்தால் இந்தியாவுக்கோ அல்லது பிரிந்து போன பின்னர் சிறீலங்காவிற்கோ அல்லது வேறெந்த நாடுகளுக்கோ ஆபத்து ஏற்படுமென்று யாராவது கூறின் அது முட்டாளின் கூற்றாகவே இருக்கும். சிங்கப்பூரைப் போல அயல் நாடுகளோடு ஒற்றுமையாக இருக்கும் ஒரு நாடாகNவு ஈழம் இருக்கும்.
எனவே இனிவரும் வாரங்கள், மாதங்கள் ஒரு தீர்வுக்கான இறுதிப் போராட்டத்தைக் காணும் காலங்களாகவே அமையும். போராட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும். அது சிங்கள மக்கள் மீதான நேரடியான தாக்குதலாக இருக்காது. அரசியல், பொருளாதார, இராணுவ இலக்குகளையே குறி வைத்து புலிகள் போராட்டத்தைத் தொடர்வார்கள். ஆனால் கிழக்கில் நிலைமை வேறுவிதமானதாக அமையலாம். பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக அமையலாம். புலிகள் அதற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள்.
இதைத் தடுத்து நிறுத்தும் வல்லமை தென்னிலங்கை மக்களிடம்; மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளை நிதானமாகச் சிந்திக்க வைக்குமளவுக்கு சிங்கள மக்களிடமிருந்து போதுமான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும ஆனால் அரசியல்வாதிகளை ஊக்குவிப்பது போலவே அவர்கள்; செயற்படுகிறார்கள். இன்றுவரை எந்தவொரு அரசியற் தீர்வுக்காகவும் நம்பிக்கை வைத்து உழைக்காதவர் என்ற வகையில் மஹிந்தவிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அதற்கு மாற்றீடான ரணில் அரசு நாட்டையே அடகு வைத்து விடும். அது வரையில் இந்தியாவினால் அனுராதபுரத்தில் பூசைபோட்டு ஆரம்பித்து வைத்த இரத்தக் களரி தொடரவே செய்யும். துணிச்சலான ஒரு னந ஊடநசம தென்னிலங்கையில் உருவாகும் வரை.
இதற்கு ஒரே முடிவு ஈழம் தான். அது சிசேரியனா அல்லது இயற்கைப் பிறப்பா என்பது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது.
அது வரையில் (அடுத்ததாகப்) ‘பிசத்தப் போவது யார்?’
(எனது இக் கட்டுரை மே மாத 'தாய் வீடு' பத்திரிகையில் பிரசுரமானது)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் ப...
-
இளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப்படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை ...
-
திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு சமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ' கட்டாயம் பார்க்கவும்' குறிப்போடு வந்த இப் பதிவைத் த...