சனி, 26 மார்ச், 2016


றொப் போர்ட் - ரொறோண்டோவின் மக்கள் திலகம்

பலருக்கு இது விசனமாகவே இருக்கும். ஆனால் நான் மதிக்கும்  மனிதருள் ரொறொண்டோவின் முன்னாள் நகர பிதா றொப் போட்டும் ஒருவர். இந்த வாரம் அவரது உடல் ரொரொண்டோ மாநகரசபைக்  கட்டிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நான் அவர்மீது வைத்திருக்கும் மதிப்பிக்குக் காரணம் தன் மனதில் பட்டத்தை ஒளிவு மறைவின்றிக் கூறுவது - அது அப்பட்டமான பொய் என்று தெரிந்தும்கூட. அது ஒரு குழந்தைக்கான குணம். ஒரு குழந்தையின் குழப்படிகளைக்  கொண்ட ஒரு முழு மனிதர். அதனால் தான்  ரொறோண்டோ பெரும்பாக மக்கள் மட்டுமல்ல உலகத்தின் கோடிகளில் இருக்கும் மக்களுக்கும் அவரது இழப்பு கவலையைத் தருகிறது.

அவர் ஒரு திமிர் பிடித்தவர் இ குடிகாரர்இ போதை வஸ்து பாவிப்பவர்இ கேடிகளோடு சகவாசம் வைத்திருப்பவர் என்பனவெல்லாம் ஊடகங்களால் ஊதப்பட்டன. பலரும் அதை நம்பினார்கள். அதில் சிலவற்றில் உண்மை இருப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் மக்கள் அவருக்காகக் கண்ணீர் விடுகிறார்கள் என்றால்?

இன்றய உலகில் எந்தவொரு குடும்பத்திலுமோ அல்லது அவர்களது உறவினர்களின் குடும்பங்களிலுமோ இப்படியொரு 'குழ்ந்தை' இல்லாமல் இருக்க  வாய்ப்பில்லை. அக் குழந்தையால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது தான் அக் குழந்தையின் குற்றம் கவனத்தில் எடுக்கப்படுகிறது.
ரொறொண்டோவின் 'குழந்தையால்' நகருக்கு ஏற்பட்ட நன்மைகள் அதிகமென்று நம்புபவர்களே அதிகம்.

றொப்  போட்டின் வீழ்ச்சிக்கு அவரது எதிரிகள் காரணமல்ல. அவரைச் சூழ்ந்திருந்தஇ அவரால் பயன் பெற்றஇ அவரை உசுப்பேத்திப் பின்னர் கைவிட்டு முதுகில் குத்திய நண்பர்கள் தான் காரணம். நண்பர்களுக்காக எதையும் செய்தத் துணிந்த வகையினரில் ஒருவர் தான் போட். அவரைப் போட்டுக் கொடுத்த ப்ரூட்டஸ்கள் அவரது சகபாடிகள் தான்.

றொப்  போட்டின் குற்றம் குறைகள் திடீரென்று அறியப்பட்டவையல்ல. அவற்றை ஊட கங்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் பலரும் அவரை விட அதிகம் கறை படிந்தவர்கள். நாற்சந்தியில் அவரது மானம் தூக்கிலிடப்பட்ட போதும் மக்கள் அதைக் கண்டு கொள்ளவுமில்லைஇ கை கொட்டிச் சிரிக்கவுமில்லை. மாறாக அவரைத் தம் குழந்தைகளில் ஒருவராகவே தத்தெடுத்துக்  கொண்டனர்.

அவரது முகத்தில் ஒரு குழந்தையின் களையே எப்போதும் தெரியும். எழுதுகோல்களைத் துப்பாக்கியாகப் பாவிக்கும் உடகங்ககளை அவர் மதித்ததில்லை. ஆனால் அவர்களை எதிர் கொள்ளாது அவர் போவதுமில்லை. ஊடகங்களை நையாண்டி செய்யும் அளவுக்குத் தைரியமுள்ள ஒரு அரசியல்வாதி அவர்.

அவர் மீது காட்டப்பட்ட அழுக்குகள் அவரில் குறைகாணும் எல்லோரிடமும் இருந்திருக்க வேண்டும்.  அவர்களது அரசியல் கவசங்கள் (pழடவைiஉயட உழசசநஉவநௌள) அவற்றை மறைத்து விடுவதுண்டு. கவசம் போடாமல் இருந்ததுதான் றொப் போட்டின் பிரச்சினை. தன் வார்த்தைகள் எவரையும் புண்படுத்துமா என்பதை யோசியாது மனதில் பட்டதை அப்படியே சொல்லும் பழக்கம் அவருடையது. பெண்களையும்  மாற்று நிறத்தவர்களையும் தூற்றுபவர். ஆனால் அவரது இழப்பின் பின்னர் மரியாதை செலுத்துவதற்கு முண்டியடித்துக் கொள்பவர்களில் இந்த இரண்டு சாராருமே முன்னணியில் நிற்கிறார்கள்.

காரணம் யதார்த்தம். நாம் யாரும் செய்யாத விடயங்களை அவர் செய்யவில்லை. நாம் யாரும் சொல்லாத விடயங்களை அவர் சொல்லவில்லை. ஒய்வு நேரங்களில் பணம் ஏதும் அறவிடாமல் வறிய குழந்தைகளுக்கு விளையாட்டுக் கற்றுக் கொடுத்தார். குடியானவர்களில் எந்த ஒருவர் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தார். இதுவெல்லாம் சபைக்கு வந்தது இப்போதுதான்.

இது சமூக உறவாடல் தளங்களின் காலம். செய்திகளைத் திரிபு படுத்தித் தம் சுய திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள்  ஒதுக்கப்பட்டு உண்மையான 'மக்கள் தீர்ப்புகள்' வெளிப்படும் காலம்.  றொப்  போட் ஒரு சாதாரண மனிதர் என்பதை அவர்கள் கண்டுகொண்டு விட்டார்கள். தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் அத தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள றொப் போட்  உயிரோடு இல்லை.

போதைச் சிகிச்சை பெற்று மீண்டபோது றொப் போட் தனது 'திருந்திய' இரண்டாவது வாழ்வுக்கான ஏக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டதாகச் சொன்னார்கள். தன் மனைவி குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவிட வேண்டுமென அவர் கூறியதாகக் கேள்வி.

றொப்  போட்டின் பதவிக் காலத்தில் அவரது சகோதரர் டக் போர்ட்  தனது தம்பியை நிழல் போல் தொடர்வார். இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் இருந்த பாசம் அதிசயமாகவிருந்தது. மரணத்துக்குப் பின் தாயாரின் கூற்றிலிருந்தும் ஒரு உண்மை புலப்பட்டது. வீட்டிலுள்ள குழப்படியான கடைக்குட்டியின் மீது எவ்வளவு பாசத்தைப் பொழிவோமோ அதுவே தான் போட் குடும்பத்திலும். அவர்கள் நம்முடையதைப் போல ஒரு சாதாரண குடும்பம்தான். அவர் நகரபிதாவாகியது தான்  அசாதாரணம். சாதாராண மக்கள் விட்டு விடுதலையாகி விட்டதற்கான அறிகுறியே அவர் நகரபிதாவாகியது. அதுவே அவர் அடுத்த சந்ததிக்கு விட்டுப் போகும் குறிகாட்டி.


றொப்  போட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது பல. அவர் தன மனத்தைப் பேசியவர். நடிக்கவில்லை. அவர் பணக்காரராயினும் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். குறைகளுடையாதாயினும் 'அது என் குழந்தை' என முத்தம் பொழியும் ஒரு தாயின் உணர்வுடனே மக்கள் அவரை நேசித்தனர். அதைத் தெரிந்துகொண்டு மனநிறைவுடன் மரணத்தை எதிர்கொண்டதே அவரது பலம்.

So long Rob!

கருத்துகள் இல்லை: