குத்தூசி
கையினை மெல்லப் பற்றிக் காவியோர் தட்டில் வைத்து
மெல்லதாய் உரசி மேனி சின்னதாய்க் கழுவி ஊசி
செருகினாள் கன்னி - ஐயோ!
பொய்யதாய் முகம் திருப்பிப் புலம்பினேன், பாவம் கன்னி
பதறினாள், நின்று மெல்லக் கையது பற்றிக்கொண்டு
கவலையோடழுத்திக் கேட்டாள்- வலிக்குதா?
வலியெதும் எனக்கொன்றில்லை
துல்லியம் என்றேன், துளைத்தது கிருமியைத்தான்,
எனக்கிலை என்றேன், நாணிச்
சிறு குழி வதனம் பொங்கச் சிரித்தனள்
பவ்யம், பயிற்சியெல்லாம் இருக்குதே என்றேன்
செலுத்தினாள் அடுத்த ஊசி சிரிப்பினால் இதயம் பார்த்து
துல்லியம் இதுதான் என்று தொலைந்தனள் கனவினுடே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக