புதன், 4 மே, 2016

மஹாகவிக்கு ஒரு சுழி


வாந்தி 



அளவெட்டிப் பெருங்கவிஞன் அன்னான்
அளந்தெடுத்துச் சொல்லடுக்க வல்லான்
வள்ளியிலும் சுள்ளியிலும் வானளந்த வெள்ளியிலும்
கிள்ளி எறிவான் தமிழை என் கவிக்கு முன்னான்

****

நல்ல கவிஞனாக ஆசை
வறுமை,
போனால் வியாதி,
போனால் மரணம்
வேண்டாம்
கவியனாகவே இருந்துவிட்டுப் போகலாம்.

****

உச்சியில் குமட்டியது
ஓங்காளித்தேன்
இரண்டு சொற் திரள்கள்
நாட்பட்டவையாக இருக்கலாம்
இப்போது சுகமாக இருக்கிறது.

****

காற்றை ஊதி
சூரியனை அணைத்து
நிலவைத் துப்பி
முகிலைச் சிதைத்து
வாழ்ந்தது போதும்
எல்லோரும் வாருங்கள்
கவிதை பேசுவோம்

வைகாசி 4, 2016

கருத்துகள் இல்லை: