செவ்வாய், 16 டிசம்பர், 2008

உனக்கு மட்டும்...

உனது சுயம்வரத்தில் நான் தோற்றுவிட்டேன்
காலம் ஒரு தடைக் கல்லாய்
என் பிறப்பில் ஒரு கண்டம்
முற் பிறப்பில் உன் கண்ணீர் வாய்க்காலை
உடைத்ததன் பலன்..
பொழிந்த கல்லாய் நிற்கிறாய்
தாமரைக் குளம், வேனில் மாலை
தனியே விட்டுன்னைச் சென்றதன் பழி..
இனி ஒருகால் எனக்காய் அழமாட்டாய்
காணாமலே இருந்திருக்கலாம்
என்னைக் கொல்வதில் இன்பமுனக்கு
புரிகிறது…

Dec.16,2008

கருத்துகள் இல்லை: