என்னைச் சீண்டியவை மட்டும்... -சிவதாசன்
வளைந்து நெளிந்து
முதுகைச் சொறிந்தால்
ஒரு நூல் தள்ளி நிற்கிறது பரு
நகங்களைத் தின்று முடித்து
எகத்தாளமாய்ச் சிரிக்கிறது வாய்
மதிலைத் தொலைத்த
மாடாகிப் போகிறது வாழ்வு
தனது உயிரைக் காப்பாற்றுவதற்காய்
விலத்திப் போகிறது கொரோணா
என்னடா வாழ்க்கை ?
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக