திங்கள், 27 மே, 2024

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

காஞ்சி - கவிஞர் சேரனின் கவிதை நூல் வெளியீடு

மே 27, 2024 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோ, கனடாவில் நடைபெற்றது.

சிறிய மண்டபமானாலும் நிறைந்திருந்தது. 

திவ்வியராஜனின் கம்பீரக் குரலால் தூக்கம் தடைப்பட்டது நல்லதாகப் போய்விட்டது. அடுத்து யுவன் சந்திரசேகர் பேசினார். நல்ல பேச்சு. மாட்டை மரத்தில் கட்டாது மாட்டைப் பற்றி மட்டுமே பேசினார். வித்தியாசமாக இருந்தது. 

சேரனின் கவிதைகள் அங்கதமானவை, ஆழமானவை.  எள்ளல், கிள்ளல், நுள்ளல் என்று கால நிலைக்கேற்ப கருக்கொள்பவை.  

வாசிப்பதற்கு இன்னும் சில பக்கங்கள் மீதமிருக்கின்றன. 

பஞ்சி கொஞ்சக்காலமாக என்னோடே அலைகிறது.

பார்க்கலாம்.